ShareChat
click to see wallet page
search
இன்று சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் T20 உலகக்கோப்பை போட்டிக்காக, ரசிகர்கள் விசில் கொண்டு வர சென்னை போலீசார் தடை விதித்துள்ளனர். மைதானம் வெளியிலும் விசில் விற்பனையும் தடுக்கப்பட்டுள்ளது. கவனிக்க வேண்டியது — இந்தத் தடை ICC, BCCI, TNCA அல்லது மைதான நிர்வாகத்தின் முடிவு அல்ல; இது முழுக்க முழுக்க காவல்துறை தீர்மானம், தேர்தல் பாதுகாப்பு காரணம் என கூறப்படுகிறது. TNCA தடைப்பட்ட பொருட்களின் பட்டியலிலும் விசில் இல்லை. அப்படியிருக்க, திடீரென விசில் தடை ஏன்❓ அனைவருக்கும் தெரியும் — விசில் என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னம். ஒரு கிரிக்கெட் போட்டியில்கூட ஆயிரக்கணக்கான விசில் சத்தம் எழுந்தால், அது மக்கள் மனநிலையை வெளிப்படுத்தும் என்ற பயமே ஆளும் தரப்புக்கு இருப்பது தெளிவாக தெரிகிறது. இது பாதுகாப்பு விஷயம் அல்ல; மக்களின் குரலை கட்டுப்படுத்தும் முயற்சிதான். ஆனால் மாற்றத்தின் காற்றை யாராலும் தடுக்க முடியாது. மைதானத்திற்குள் இல்லாவிட்டாலும், மக்கள் மனதில் விசில் ஓசை தொடர்ந்து ஒலிக்கும். #தலைவர் விஜய் (TVK) #தமிழக வெற்றி கழகம் (TVK) #tvk #✨💗TVKFORTN💗✨ #✨💗TVKForTN 💗✨
தலைவர் விஜய் (TVK) - சின்ப LRTS TVI @tvkpulse சின்ப LRTS TVI @tvkpulse - ShareChat