ShareChat
click to see wallet page
search
அத்தியாயம் 71 என்னடா பண்ணுவ ??? ... யாருன்னா இவங்க ??? ... கல்யாணம் என்ற பெயரில அவங்க வாழ்க்கை அழிச்சான்னு சொன்னேன்ல அது அவர்தான் ராவணன் .. மைத்ரேயின் ராவணன் அவன் ... அண்ணா !!! ... ம்ம் !!! ... என்று மட்டுமே சொல்லிவிட்டு விக்ரம் உள்ளே செல்ல  .... அப்பொழுது இருவர் மட்டும் தான் ... எதிரெதிரே இருக்க ... அவர்களின் மூச்சுக்காற்றும்  அனலாக தான் தெரிந்தது  ... 🔥 அந்த அளவுக்கு கோபத்தை இருவரும் உடல் மொழியில் உணர்த்துக் கொண்டிருக்க ... ஒரு கட்டத்தில் முடியாது என்பது போல _ " இன்னொரு வாட்டி .... என் பொண்டாட்டி பக்கம் நீ  திரும்பின " 🔥 ... "என்னடா பண்ணுவ ? ... இப்ப சொல்றத நல்ல கேட்டுக்கோ ... என்னோட ஃபுல் போக்கஸ்சும் இனிமே அவங்க மேல தான் இருக்கும் ... உன்னால முடிஞ்சத பாத்துக்கோ வரட்டா .. என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தருண் செல்லும்போது .. சொடக்கிட்டு திரும்ப அழைத்த ராவணனோ ... She is my life ♥️ ... you can't do anything about it , can you ??? .... அதற்கு சிறு புன்னகை மட்டும் சிந்தி விட்டு அங்கிருந்து தருண் சென்ற விட ... அதே சமயம் அந்த புன்னகையில் மறைந்திருக்கும் எண்ணங்கள் யார் அறிவார் ??? ... அது இராவணனையோ ஏதோ செய்து விட்டது !!! ... இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் ... எனக்கு பாட்டி வேணும் ... ஆ !!! ... அவங்கள வர சொல்லுங்க ??? ... இப்பவே வந்தாகணும் ....  அப்பதான் நான் சாப்பிடுவேன் ... பிடிவாதம் பிடிக்காத வம்சி .... நேத்துல இருந்து நீ எதுவும் சாப்பிடல டா .. ஒரு வாய் வாங்கிக்கோ அம்மாவுக்காக . .. முடியாது !!! .... அவங்கள நீங்க சொல்லுங்க ??? ... அப்பதான் சாப்பிடுவேன் ... வம்சி அம்மா சொல்றதை கேளு ??? ... முடியாது 🔥 ... என்று வம்சி சொல்லிக் கொண்டே ... அவள் கையில் இருந்த சாப்பாடு தட்டை தூக்கி அடிக்க ...  அப்போது தட்டில் உள்ள  சாப்பாடு எல்லாம் மைத்ரேயின் மேல் பட்டு தெறித்து கீழே விழ ... அப்பொழுது !!! .... அச்சோ  என்னடி ஆச்சு ??? ... இப்படி இருக்கு ??? ... மைத்ரேயி யார் இதை பண்ணது ??? .. விடு ஜனனி ... என்ன விடு ??? ... ம்ம் !!! ... டேய் !!! ... வாண்டு இது உன்னோட வேலை தானே !! ... எதுக்குடா இப்படி பண்ண ??? .. அம்மா கிட்ட சாரி கேளு ... கேட்க முடியாது 🔥 .... அவங்கள போ சொல்லுங்க ??? ... எனக்கு பாட்டி வந்தாகணும் இப்பவே .... என்று .... மீண்டும் அடம் பிடிக்க ... ஏய் !!!! என்னடி இது ??? .. இப்படி அடம் பிடிக்கிறான் ... நீ பாட்டு அமைதியா இருக்க ??? ... ரெண்டு போடு ... போடு ... அடிச்சா மட்டும்  திருந்திருவானா ... வேற சாப்பாடு எடுத்துட்டு வர ... அவன சாப்பிட சொல்லு ... என்று சொல்லிக்கொண்டே கீழே சிதறி கிடந்த சாப்பாடை எல்லாம் தட்டில் போட்டு எடுத்துக்கொண்டு மைத்ரேயியோ சமையல் கட்டுக்குள் சென்று விட .. அப்பொழுது ... சாப்பிட முடியாது ... சாப்பிட முடியாது .... என்று சொல்லிக் கொண்டே வம்சி வெளியே ஓட  ... டேய் !!! ... டேய் !!! ... எங்க டா போற ... என்று கத்திக்கொண்டே ஜனனியும் அவன் பின்னால் ஓட ... அப்பொழுது வம்சியோ ஓடிய வேகத்தில்  சிதறி கிடந்த தண்ணீரை கவனிக்காமல் கால் வைக்க ... அதே சமயம் சாப்பாடு தட்டுடன் வெளியே வந்து கொண்டிருந்த மைத்ரேயியோ ...  அதை பார்த்து ஒரு நிமிடம் பெண் அவளுக்கு இதயமே நின்று போனது ..  அதில் கையில் இருந்த தட்டை கீழே போட்டு விட்டு ... பயத்தில் வம்சி என்று அலறிக்கொண்டு ஓடி வர ... அதுவோ வழுக்கிக் கொண்டு கீழே விழப்போனவனை ... தாங்கியது வலியை கரம் .... ஆம் !!! ராவணன் தான் ... அதே சமயம் அதை பார்த்துக் கொண்டிருந்த ஜனனியோ பெருமூச்சுடன் நல்லவேளை அண்ணா கரெக்ட் வந்துட்டீங்க  .... ம்ம் !!!! ... ஜனனி ... ஆமா !!! ...  இது யாரு குழந்தை ???  ... என்று ராவணன் கேட்கும் போதே  .... வம்சி என்று ஓடிவந்த மைத்ரேயியோ ...  ராவணனிடம் இருந்து பிடுங்கி கொண்டு ... அதே சமயம் ராவணனின் பார்வையில் தன் மைத்ரேயின் மீது படிய ... ஏன்டா !!! ... ஏன்டா !!! ... இப்படி பண்ற ??? .. கீழ விழுந்திருந்தனா ....  என்ன ஆகியிருக்கும் டா ... எங்கேயாவது வலிக்குதா ... உனக்கு அடிபட்டுடுச்சா ... ஏதாவது பதில் சொல்லு ???  ... அம்மா கிட்ட ... என்று சொல்லும்போது ராவணனின்  கண்கள் விரிய ..... எனக்கு பாட்டி வேணும் ... வர சொல்லுங்க ??? ... இப்பவே .... என்று சொல்லும்போது மைத்ரேயின் கண்களில் இருந்து கண்ணீர் ... மைத்ரேயி !!!  .... ஜனனி என்னடி பண்றது ??? ... நேத்துல இருந்து என் குழந்தை சாப்பிடல ... என்னால முடியலடி இல்லாதவங்க எப்படி வருவாங்க .. அவனுக்கு இதை இப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல எனக்கு தெரியல ???  .  ... அவனோட பிடிவாதம் எனக்கு பயமாயிருக்கு . ... பார்த்தல்ல !! ... என்று சொல்லும்போதே   ... குழந்தையை என்கிட்ட கொடு ... ம்ம் !!! ... ஜனனி ... அண்ணா டி ... ம்ம் !!! ... என்று முகத்தை திருப்பிக் கொண்டு  .. என்  குழந்தையை யார் கிட்டயும் தர முடியாது ... என்று சொல்லும்போதே  அவளிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்து எடுத்த ராவணனோ ... பிரித்தெடுக்கும் அந்த சமயம் "அதில் அவள் உலகமே ஒரு நிமிடம் நின்றது போல இருக்க " 💔 ... அடுத்த நொடியே !!!  .... ஏய் !!! என்ன பண்ற ??? .. என் குழந்தை ... என்று மைத்ரேயி கத்தி கொண்டு இருக்க ... அந்நொடி அவளைப் பாராது ... குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே செல்ல பார்க்கும் போது தான் ... என்ன  நினைத்தானோ !!! .... என்னமோ !!!! ... ஜனனி தம்பிய வெளிய கூட்டிட்டு போறேன் ... அவள அழ வேண்டாம்ன்னு சொல்லு !!! ...  அப்புறம் அவளும் சாப்பிடலாம் நினைக்கிறேன் சாப்பிட சொல்லு .... நான் இப்ப வந்துடறேன் ... மைத்ரேயி அண்ணா சொன்னது கேட்டுச்சா !!!  .. ம்ம் !!!! ... என்று மட்டும் சொல்லி விட்டு மைத்ரேயி விறு விறுவென்று  தன் ரூம் கதவை சாற்றி கொண்டு உள்ளே சென்று விட ... எப்போ !!!  புயலோஞ்ச மாதிரி இருக்கு ... ஆனா !!!! ரெண்டுத்துக்கும் ஒன்னும்  சளைச்சவங்க இல்ல ... சரியான ஆளுங்க தான் ரெண்டு பேரும் 🔥 ... இரண்டு மணி நேரம் கழித்து .... ஜனனி இப்படி இத கட் பண்ணு ... அப்ப தான் சாம்பருக்கு நல்லா இருக்கும் ... மைத்ரேயி இப்படியா ???  ... ம்ம் !!! ... அத நீட்ட வேணும் ... இங்க பாரு !!! ... எத்தனை வாட்டி சொல்றது ??? ... ஒருவாட்டி சொன்னா புரியாது ... இப்படி இல்ல அது இப்படி .. மறந்துட்டேன் ... அதுக்குள்ளயா ... ம்ம் !!! ... சமையல் பண்ணனும்னு ஆசைப்படுறேன் ... ஆனா !!!  எல்லாத்தையும் மறந்தா எப்படி ??? .. கொஞ்சம் சலிச்சுக்காம சொல்லுடி.  ... உனக்கே தெரியும் இல்ல ... நான் சாப்பிட்டே பழக்கப்பட்டேன் ... இத்தனை வருஷம் ... இப்பதான் ஒழுங்க சமைக்க ஆசைப்படுறேன் ..... அது சரிதான் .. அப்போ கொஞ்சம் ஆர்வமா இருடி ... இனிமே கரெக்டா இருக்கிற மேடம் .. நீங்க சொல்லிக்குடுங்க ... உன் பணிவ பாத்தா பயமா இருக்கு .... என்று சொல்லிக்கொண்டே வாசலை பார்த்தபடியே இருக்க. .. ஓய் !!! ... என்னாச்சு ??? ... அது ஒன்னும் இல்லடி ... அண்ணாவ தேடுறியா ??? ... ம்ம் !!! ..  என்னோட பிள்ளைய தேடற ... உன் அண்ணாவ கிடையாது ... நம்பிட்டேன் நம்பிட்டேன் ... சரி நீ நம்பு நம்பாம போ ... இப்ப சமையல் வேலையை பாரு ... சொல்லிக் கொடுத்த மாதிரி நீ தான் சமைக்கணும் ... சரிங்க மேடம் ... ஒரு நிமிஷம் !!! ... என்று சொல்லிக்கொண்டு தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து போனை எடுக்க ... இப்ப எதுக்கு இதெல்லாம் எடுக்க ??? ... மொத வாட்டி ஒழுங்கா சமைக்க போறேன்  ... எதுவும் மிகப்பெரிய செஃப் கூட அதான் செல்பி ... அப்படியே இன்ஸ்டாகிராம் பேஸ்புக்ல எல்லாம்  போட்டுடலாம்னு ... விளங்கிடும் ... சரி நீயும் வா நம்ம ரெண்டு பேரும் போட்டோ எடுத்துக்கலாம் ... அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ...  நீ மட்டும் எடுத்துக்கோ ... போடி என்று சொல்லிக்கொண்டே போனில் உள்ள கேமராவை ஆன் செய்ய ... உன்னையெல்லாம் எந்த லிஸ்ட் ல சேர்க்கறதுன்னு எனக்கு தெரியல என்று சொல்லிக் கொண்டே திரும்பும் போது தான் ... அதே சமயம் ... கை கால்களில் சிராய்புடன்  குழந்தை தூக்கி கொண்டு வந்தவனை பார்த்து ... காத்திருங்கள் அடுத்த பதிவில் ??? ... ராவணனின் அடிமை இவளே மைத்ரேயி ... தொடரும் ... "ராவணனின் அடிமை இவளே மைத்ரேயி", - பிரதிலிபியில் படிக்க :, https://pratilipi.app.link/9zrPblI4R1b #Audio story #love #story #pratilipi stories #💝இதயத்தின் துடிப்பு நீ இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம் இந்த கதை எப்படி இருக்குன்னு சொல்லுங்க அதுமட்டுமல்ல இது போட்டி கதை ... இதை படிக்கிறவங்க லிங்க் கொடுத்து இருக்கேன் பிடிச்சிருந்தா படிங்க friends
Audio story - ராவணனின்அடிறைஇளளேறைத்ரேயி அத்தியாயம் 71 = என்னபாபண்ணுவ??? காயத்துட( ன் வந்தான்! றைத்ரேயியின் கண்ணீர்! ராவணனின்அடிறைஇளளேறைத்ரேயி அத்தியாயம் 71 = என்னபாபண்ணுவ??? காயத்துட( ன் வந்தான்! றைத்ரேயியின் கண்ணீர்! - ShareChat