ShareChat
click to see wallet page
search
#ஓம்_சிவாய_நமக #சிவ_சிவாய_நமக..... #பிறவாமை_அருள்வாய் #பிரதோஷ_நாயகா.... #சொல்வதனால்_குறைந்து_போகும் பொருள்கள் இரண்டு. அவை புண்ணியம், பாவம். நீங்கள் செய்த புண்ணியங்களை – தருமங்களை – நீங்களே எடுத்துச் சொல்வதனால் #புண்ணியம் குறையும். நீங்கள் செய்த பாவங்களை நீங்களே பிறரிடம் கூறுவதனால் #பாவம் குறையும். #குறைய_வேண்டியது_பாவம்; நிறைய வேண்டியது புண்ணியம். ஆதலால் நீங்கள் செய்த புண்ணியத்தைக் அனைவரிடமும் பெருமையாக கூறிக்கொள்ளவேண்டாம்..; பாவத்தைக் கூறுங்கள். #மூன்று_அழுக்குகள் மனிதனிடத்தில் தோன்றும் அழுக்கு மூன்று வகையாகும். அவை; 1. மன அழுக்கு - பொறாமை, ஆசை, கோபம், பகை இந்த மன அழுக்கைத் ‘தியானம்’ என்ற நீரால் மட்டுமே சுத்தம் செய்ய முடியும். 2. வாயழுக்கு - பொய், புறங்கூறல், தீச்சொல் இந்த வாயழுக்கை ‘துதி’ என்னும் நீரால் மட்டுமே சுத்தம் செய்ய முடியும். 3. மெய்யழுக்கு - கொலை, புலை, பிறன்மனை நயத்தல், களவு முதலியன. இந்த மெய்யழுக்கை ‘அர்ச்சனை’ என்னும் நீரால் மட்டுமே சுத்தம் செய்ய முடியும். ஆனால் எவர் ஒருவர் இந்த மூன்று அழுக்குகளை செய்கிறாரோ அவருக்கு பாவம் நிச்சயமானது.... எனவே மனதார உணர்ந்து இந்த எண்ணம், சொல், செயல் மூலமாக பாவம் செய்யாது கடவுளுக்கு நேர்மையான வாழ்க்கை வாழ மிக மிக தூய்மையான தெய்வ பக்தி வேண்டும். இறைவனின் கருணை வணக்கமும் வழிபாடும் மட்டும் இறைவனின் கருணையைப் பெறும் வழி இல்லை. துன்பமுற்றுத் துடிக்கிற உயிர்களிடம் கருணை செய்து, அவற்றின் துன்பத்தை நீக்க வேண்டும். பிற உயிர்களிடம் கருணை செய்தால் #கடவுள்_உன்னிடம்_கருணை_செய்வார். பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்... அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்.... #ஓம்_நமசிவாய_வாழ்க.. #சரணம்_சரணம் #மகேஷ்வரா.... #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
🙏ஹர  ஹர மஹாதேவ்⭐ - ShareChat
00:12