ShareChat
click to see wallet page
search
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு ஆரம்பம் - நாள் 03.01.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== பூலோக மெல்லாம் பொய்யான மாகலியன் மாலோ சனையிழந்து மாறியே மானிடவர் சாதி யினம்பிரித்துத் தடுமாறி மானிடவர் ஊதி னங்களாக ஒன்றுக்கொன் றேயெளிதாய் பிரட்டுருட்டாய் மானிடரைப் பிலமுள்ளோர் தானடித்து மருட்டும் புரட்டுடனே மாநீச னாளுகையில் மாரி யதுபொழிந்து வைகை யதுவுடைத்து ஏரி வழிந்து இராச்சியத்தைத் தானெடுக்க வெள்ளம் பெருகி வெம்மருண்ட தம்மானை உள்ளமகிழ்ச் சோழனுக்கு உடனேதா னாளோடி மனுநீதிக் காவலவா வைகையடை யாதிருந்தால் இனித்தேசந் தன்னை யாம்தேட ஞாயமில்லை ஊரை யரித்து உவரிதனில் கொண்டேகும் பாரை மிகஆளும் பத்தியுள்ள சோழமன்னா என்றுகுடி யானவர்கள் இராசனுக் கேவுரைக்க அன்றுதான் வைகை அணையடக்க வேணுமென்று எல்லா வகைச்சாதி இப்போ வரவழைத்து வல்லபுகழ் மன்னன் வைகை யணையில்வந்து மண்ணோடு கல்லும் மரங்கள்மிகு வைக்கோலும் எண்ணெண்ணக் கூடாத ஏதுவகை யானதெல்லாம் கொண்டுவந் தேயணையில் கூறிட்டுத் தானடைக்க அன்றுஅடை படாமல் அறிவழிந்து சோழமன்னன் அய்யோ பாழாக அவனிதான் போகுதென்று மெய்யோடு மெய்குழறி வெம்மருண்டு நிற்கையிலே கோளனென்ற மாநீசக் குலத்தி லுதித்துவந்த ஈழனொரு பொல்லாதான் என்சொல்வா னம்மானை மன்னவனே இந்தவைகை மலையெடுத்து வைத்தாலும் இன்னமிது கேளாது ஏலாது நம்மாலே தெய்வகுலச் சான்றோராய்ச் சித்திர மாகாளி கையதுக்குள் பிள்ளையெனக் கட்டாய் வளருகிறார் அந்தச் சான்றோரை அழைத்திங்கே கொண்டுவந்து இந்த அணையடைக்க ஏலுமென்றா னம்மானை . விளக்கம் ========== கைலை வாசிகளெல்லாம் மகாவிஷ்ணுவின் ஆலோசனையைக் கேட்டு அதற்கேற்ப பண்டாரக் கோலந்தாங்கி மண்ணக வாசிகளைப் போல் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால், மண்ணகத்து மக்களெல்லாம் பொய்யான பெருங்கலியின் மாய்கையினால், மகாவிஷ்ணுவின் ஆலோசனை அவர்களுக்கு கிட்டாத காரணத்தால், கலிக்குள் அகப்பட்டு, பல்வேறு சாதிகளாகப் பிரித்து, மனித இனத்திற்கே இயல்பான வாழ்வியல் நெறிகளில் தடுமாற்றமடைந்து, உண்டு கொழுத்த மாமிசப் பிண்டங்களைப்போல், ஒருவரை ஒருவர் அடிமைகளாக்கி பொய்யும், புரட்டும், வஞ்சகமும், சூழ்ச்சியும், பொறாமையும், கபடமும், பேராசையும், புகழாசையுங் கொண்ட கொடிய அசுரர்களாக வாழ்ந்தது மட்டுமின்றி எளியோரை வலியோர் அடித்து உதைத்து அடிமைகளாக்கினர். . இப்படி பகட்டான கலி மிரட்டாக இந்த பூலோகத்து மக்களின் மனங்களை ஆட்சிபுரிந்து கொண்டிருக்கும்போது, சோழ நாட்டில் பெருமழை பெய்யத் தொடங்கியது. அதனால் நாடே வெள்ளக் காடாகியது. எல்லா வெள்ளமும் பள்ளத்தை நோக்கி பாய்ந்தது. துள்ளிவந்த வெள்ளம் கொள்ள இடமின்றி உடைப்பெடுத்து ஊரெங்கும் பாய்ந்தது. எனவே, ஏரி, குளங்கள் எல்லாமே ஒன்றாகிச் சோழநாடே சலப்பிரளயம் போல் காட்சியளித்தது. . உடனே மக்களெல்லாம் கூடினர், சோழமன்னனை நாடினர். மனுநீதிக் காவலரே, எங்களை ஆளுகின்ற மன்னவரே, கடலலைபோல் திரண்டு வரும் வெள்ளத்திற்கு இப்போது நாம் அணை போடாதிருந்தால் நம்முடைய நாட்டை இந்த வெள்ளம் கடலுக்குள் கொண்டு சேர்த்துவிடும் என்றனர். . மன்னவனோ, சோழநாட்டில் வாழுகின்ற அனைத்துச் சாதி மக்களையும் வரவழைக்க உத்தரவிட்டார். மன்னனின் கட்டளைப் படியே மக்களும் வந்து கூடினர். மன்னனும் அங்கே வந்து நின்று கொண்டு, மண்ணையும், கல்லையும், மரங்களையும், வைக்கோல் முதலான பலதரப்பட்ட பொருட்களை எல்லாம் கொண்டுவந்து அணை கட்டுங்கள் என்று ஆணையிட்டார். மன்னனின் கட்டளைப்படி மக்களெல்லாம் அவர்களால் முடிந்த மட்டும் முயன்றனர். அனைத்து முயற்சிகளும் பாழாகிவிட்டன. போட்ட பொருட்களெல்லாம் கடலுக்குத் தம்மை காணிக்கையாக்கி கொண்டன. . அய்யகோ என்று அலறினார். சோழமன்னர், நாடழியப் போகிறதே என்று நடுநடுங்கினார். அதிர்ச்சியால் அவருடைய அறிவுக் குழம்பு உறைந்து விட்டது. செய்வதறியாமல் மன்னன் செயலற்று நிற்கிறார். . அப்போது அங்கே நின்ற கோள் உரைக்கும் கொடியதோர் கலியன் மன்னனிடம் ஓடி வந்து மன்னவரே, மலையையே பெயர்த்தெடுத்துக் கொண்டு வந்து வைத்தாலும் இந்த வெள்ளத்தை தடுத்து நிறுத்த முடியாது. இன்னும் எந்த உபாயத்தைச் செய்தாலும் இதை அடைக்க ஏலாது நம்மாலே. ஆனால் பத்திரகாளியின் பிள்ளைகளாக அந்த மாகாளியின் கட்டுப்பாட்டிற்குள் வளர்ந்துவருகின்ற தெய்வ குலச் சான்றோரை இங்கே அழைத்து வந்தால் அவர்களால் மட்டுமே இந்த அணையை அடைக்க முடியும் என்றான். . . அகிலம் ======== அப்போது சோழன் அந்நீசக் கலியதினால் இப்போது மயங்கி என்சொல்வான் மன்னவனும் மந்திரியே நம்முடைய வாய்த்த படைத்தலைவா தந்திரியே நீங்கள்சென்று சான்றோரைத் தான்கூட்டி வாருமென்று சொல்லி மன்னவ னேவிடவே சேருமென்று சொல்லச் செவுகர் தாம்விரைந்து அழைத்துவந்தார் சான்றோரை அரசன்மிகக் கொண்டாடித் தழைத்தபுகழ் சான்றோரே சந்தோசமாக இப்போ வைகை தனையடைக்க வழிபாரு மென்றுரைத்தான் . விளக்கம் ========= மனுநீதிக்காவலனாக, நீதி வழுவா நெறிமுறைகளோடு ஆண்டுவந்த சோழ மன்னன், இப்போது கலி மாயையின் கோரப் பிடியிலே சிக்கி, செய்வதறியாமல் தவிக்கிறார். கோளுரைத்த அந்தக் கொடியவனின் கூற்றினால் சோழ மன்னனின் குணம் குழப்பமடைகிறது. எனவே, அவருடைய மறுத்துப் பார்க்கும் திறன் மறைந்தது. ஆகவே, அதன் விளைவு என்னவாகும் என்ற வினாவோ, அதற்கான விடையோ அவருக்கு புரியவில்லை. . இத்தகு குழப்ப நிலையிலே தன்னுடைய அமைச்சரையும் படைத் தளபதியையும் அழைத்து, நீங்கள் சென்று சான்றோரை இங்கே அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். . உடனே அமைச்சரும், தளபதியும், ஏனைய சேவகர்களும் சேர்த்து சென்று, சான்றோரை அழைத்து வந்தார்கள். அதனால் மகிழ்ச்சியுற்ற மன்னன் சான்றோரைப் பார்த்து நீடித்து நிலைத்த புகழுக்குச் சொந்தக்காரர்களான சான்றோர்களே, கரை கடந்து வரும் இந்தக் காட்டாற்றை அழைப்பதற்கு வழி பாருங்கள் என்றார். . . தொடரும்... அய்யா உண்டு. #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar
💚Ayya 💗 Vaikundar💚 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 0 Muthu Prakash வகுத்திடவே னுரைத்த முறையோ லுள்ள முன் மகாபெரிய கிரீடமு மவர்க்குச் சூட்டிப் பகுத்துடைய செங்கோலும் பரம னார்தன் பரம்பெரிய முத்திரியும் பலன்கள் யாவும் தொகுத்திடப்பொன் னீராளத் துகிலு மீந்து துதிசிங்கா சனமீதில் வைத்து தூக்கி மகுத்துவமாய் வாழுமென வானோர் போற்ற மறையவரு மீசுரரும் வரமே யீந்தார் ! அகிலம் 03.01.2026 வீரத்தனமாய் இருங்கோ ! விளக்கின் போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 0 Muthu Prakash வகுத்திடவே னுரைத்த முறையோ லுள்ள முன் மகாபெரிய கிரீடமு மவர்க்குச் சூட்டிப் பகுத்துடைய செங்கோலும் பரம னார்தன் பரம்பெரிய முத்திரியும் பலன்கள் யாவும் தொகுத்திடப்பொன் னீராளத் துகிலு மீந்து துதிசிங்கா சனமீதில் வைத்து தூக்கி மகுத்துவமாய் வாழுமென வானோர் போற்ற மறையவரு மீசுரரும் வரமே யீந்தார் ! அகிலம் 03.01.2026 வீரத்தனமாய் இருங்கோ ! விளக்கின் போல் ஒளி - ShareChat