"என்னிடம் வந்தவர்கள் அனைவரும் இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்பார்கள். நானும் தட்டாமல் கொடுப்பேன். சாகும் தறுவாயில் நான் இருக்கும் போதும், என்னிடம் தானம் கேட்டு புண்ணிய பலன்களை பெற வந்தவனும் இங்கே இருக்கிறான். பெற்றவுடன் என்னை அனாதையாக்கிய என் அன்னை முதல்முதலாக என்னை சந்தித்த போதுகூட தமையனை கொல்லாத வரம் தர வேண்டும் என்றுதான் கேட்டாள். இதுவரை யாரும் எவரும் கர்ணா உனக்கு என்ன வேண்டும் என்று என்னை கேட்டதில்லை. என் வாழ்வின் வரம் அப்படி.! நான் கேளாமலேயே ராஜ்ஜியத்தை கொடுத்தவன் துரியன். கொடுத்து சிவந்த எனது கரம் தாழ்ந்து பெற்றது முதலும், கடைசியுமாக அவனிடம்தான். அவனுக்கு கொடுக்க என்ன இருக்கிறது என்னிடம். இந்த உயிர் தவிர.!"
#கர்ணன்
#🤔தெரிந்து கொள்வோம்


