திருமந்திரம்.
ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப்
பூண்டு கொண்டாடும் புகுந்தறிவாரில்லை
நீண்டகாலங்கள்நீண்டு கொடுக்கினும்
துண்டு விளக்கின் சுடர் அறியாரே.
தெளிவுரை:மண்ணுலகில் மானிடராய் பிறந்து பல ஆண்டுகள் கழிந்தன. அனைவருக்கும் அப்பனாய் விளங்கும் பரம்பொருளை எண்ணி போற்றாமல் வாழ்நாளை வீழ்நாள் ஆக்கினர். மேலும் பல்லாண்டுகள் வாழ வாய்ப்புள்ளது. இறைவனை எண்ணி போற்றிட வேண்டாமா. எண்ணெயும் திரியும் அதனைத் தாங்கி ஒளிபரவச் செய்யும் விளக்கும் உள்ளது. எனினும் ஒளி குன்றாமல் குறையாமல் இருக்க தூண்டுகோல்வேண்டுமே அத்தூண்டுகோலே மனித பிறப்பு. மனிதப் பிறப்பு மூலம் இறை எண்ணத் தை தூண்டி ஒளிபெற வாழ முயல்வோம்.
திருச்சிற்றம்பலம் #🔥 ருத்ராபிஷேகம்🕉️ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
00:53

