sudhakar godwin
535 views 18 hours ago
🌿இன்றைய தேவ வார்த்தை / தீர்க்கதரிசனம் 🌿 📖“கிறிஸ்து நம்மை நியாயப்பிரமாணத்தின் சாபத்தினின்று மீட்டுக்கொண்டார்; அவர் நமக்காகச் சாபமாகி, சிலுவையில் தொங்கினார்.” -- காலாத்தியர் 3:13 🎙️ இன்றைய தேவனுடைய செய்தி அன்பான தேவப்பிள்ளைகளே, நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் எந்தச் சாபத்திற்கும், தோல்விக்கும், கட்டுகளுக்கும் இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் முடிவு உண்டு! நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து நம்மை மீட்பதற்காக கிறிஸ்து நமக்காகச் சாபமானார். அதனால் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களின் வாழ்க்கையில் சாபம் தொடரும் வார்த்தையாக இருக்க முடியாது. சிலுவையின் கிருபைதான் உங்கள் வாழ்க்கையின் புதிய அடையாளம்! நீண்ட நாட்களாக உங்கள் குடும்பத்தில் தொடர்ந்து வந்த பிரச்சினைகள், தலைமுறை தலைமுறையாக வந்த தோல்விகள், பொருளாதார நெருக்கடிகள், முன்னேற்றத்தைத் தடுத்த தடைகள், மீண்டும் மீண்டும் வருகின்ற போராட்டங்கள்—இவைகள் உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது. இயேசு உங்களுக்காகச் செய்த சிலுவைப் பலி, உங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் திறக்கிறது! ✨ உங்களுக்கான நற்ச் செய்தி நீங்கள் சாபத்தின் கீழ் வாழ அழைக்கப்படவில்லை; கிறிஸ்துவின் ஆசீர்வாதத்திற்குள் வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். இன்று முதல் உங்கள் வாழ்க்கையில் தடைகள் அனைத்தும் உடைக்கப்படும். முடங்கிப்போன காரியங்களில் முன்னேற்றம் வரும். குடும்பத்தில் சமாதானம் நிலவும். பொருளாதாரத்தில் புதிய வழிகள் திறக்கும். நீண்ட நாட்களாக காத்திருந்த அனுபவம் முடிவுக்கு வரும். 🔥 தீர்க்கதரிசன அறிக்கை: உங்கள் வாழ்க்கையின் மீது இருந்த ஒவ்வொரு சாபமும் சிலுவையின் வல்லமையினால் முறியடிக்கப்படுகிறது! உங்கள் குடும்பத்தின் மீது ஆசீர்வாதம் வருகிறது. உங்கள் பிள்ளைகளின் மீது கிருபை பெருகுகிறது. உங்கள் வேலை, தொழில், வியாபாரம் மற்றும் ஊழியத்தின் மீது தேவனுடைய கரம் இருக்கிறது. மூடப்பட்ட கதவுகள் திறக்கப்படுகின்றன. தாமதமான பதில்கள் வெளிப்படுகின்றன. இழந்தவை மீண்டும் ரெட்டதனையாய் உங்களுடையதாகின்றன. தொடர் தோல்விகள் முடிவடைகிறது, வெற்றியின் புதிய காலம் ஆரம்பமாகிறது! 🙏 ஜெபம்: அன்பின் பரலோகப் பிதாவே, எங்களுக்காக சிலுவையில் தம்மையே கொடுத்து, சாபத்திலிருந்து எங்களை மீட்ட இயேசு கிறிஸ்துவுக்காக நன்றி செலுத்துகிறோம். எங்கள் வாழ்க்கையிலும், குடும்பத்திலும், பிள்ளைகளிலும், தொழிலிலும், பொருளாதாரத்திலும் இருந்த ஒவ்வொரு கட்டும் முறியட்டும். சாபத்தின் தாக்கங்கள் அனைத்தும் நீங்கி, கிறிஸ்துவின் ஆசீர்வாதம் எங்கள் வாழ்க்கையில் பெருகட்டும். மூடப்பட்ட கதவுகள் திறக்கப்படட்டும். புதிய வாய்ப்புகள் உருவாகட்டும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்! 🙏 ✍️ சகோ. சுதாகர் காட்வின் 🔥 ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் FOLLOW US 📘 Facebook | 📸 Instagram | ▶️ YouTube | 💬 ShareChat #சகோ சுதாகர் காட்வின்
10 likes
10 shares

More like this