RamaswamyAnnamali
#பத்திஸ்டேட்ஸ் பழம் – சுடாத பழம் - மரணமில்லாப் பெருவாழ்வின் ரகசியம்
ஔவையாரும்...
முருகப் பெருமானும் நாவல் மரத்தடியில் நிகழ்ந்த அந்த உரையாடல்...
மனித உடலுக்குள் மறைந்திருக்கும் வாசி யோகத்தின் மௌன வேதம்!
நாவல் மரம்... அது வெளியில் நிற்கும் மரமல்ல...நம் உடம்பே அந்த மரம்! அதன் கிளைகள்... 72,000 நாடிகளின் பரவல்!
அதன் உச்சியில் தொங்கும் கனி... கபால உச்சியில் மறைந்திருக்கும் அமுத கலசம்!
அதை அடையாத உயிர்... பிறக்கிறது... வளர்கிறது... முதிர்கிறது... மண்ணில் விழுகிறது...
அதுதான்... சுடாத பழம். அக்னியால் சுடப்படாத கனி... மண்ணில் விழுந்தவுடன்... மண் ஒட்டிக் கொள்கிறது.
அதுபோல... வாசி நெருப்பால் பக்குவம் பெறாத உடம்பில்... கர்மம் ஒட்டுகிறது... மாயை ஒட்டுகிறது... பிறவி ஒட்டுகிறது... மரணம் ஒட்டுகிறது. உடல் சிதைகிறது...
உயிர் மீண்டும் கருவறையைத் தேடுகிறது. இதுவே...சம்சாரச் சுழற்சி.
ஆனால்... உடலின் மூலத்தில் உறங்கும் அந்த மூலக்கனலை... வாசி என்னும் உயிர்க்காற்றால்...
உள்முகமாக எழுப்பி... சுழுமுனை மார்க்கத்தில் உயர்த்தி... கபால உச்சியில் சேர்த்து...உடலையே அக்னியில் பக்குவப்படுத்தும் போது... உடல்...வெறும் சதையல்ல...
ஒளியாகிறது.
சுவாசம்...வெறும் காற்றல்ல...அருளாகிறது. உயிர்...வெறும் ஜீவனல்ல...
சிவமாகிறது. அதுவே...சுட்ட பழம்.
அப்போது...மண் ஒட்டாது... வினை ஒட்டாது... மரணம் ஒட்டாது...
ஏனெனில்...அந்த உடல்... மண்ணின் உடலல்ல... ஒளியின் உடல். அதுவே... சித்தர்கள் போற்றிய தேக சித்தி. மரணமில்லாப் பெருவாழ்வு.
"பாட்டி... சுட்ட பழமா வேண்டுமா? சுடாத பழமா வேண்டுமா?" என்ற முருகனின் கேள்வி... பழத்தைப் பற்றியதல்ல... உடம்பைப் பற்றியது.
"இன்னும்...நாம் உடம்பை... வாசி நெருப்பால்... பக்குவப்படுத்தவில்லையா என்ற ஞானக் கேள்வி.
அதைத்தான்...அவர் புன்னகையால் போதித்தார்.
இன்று... நாமும் நம்மையே கேட்க வேண்டும்.
என் சுவாசம்... வெளியே மட்டும் ஓடுகிறதா? அல்லது... உள்நோக்கி திரும்புகிறதா?
என் உடல்...மண்ணுக்கா வளர்கிறது?அல்லது... ஒளிக்கா பக்குவமாகிறது?
சித்தர்கள் சொன்னார்கள்:
உடம்பை வெல்லாமல்...
காலனை வெல்ல முடியாது.
வாசியை அறியாமல்...
வாழ்வின் வாசலைத் திறக்க முடியாது.
அக்னியை எழுப்பாமல்...
அமுதத்தை அருந்த முடியாது.
மண்ணில் விழுந்து அழியும் சுடாத பழமாக இருக்காதே... வாசி நெருப்பில் பக்குவம் பெற்று... மரணத்தை வென்ற சுட்ட பழமாக மாறு!
அப்போது... பிறவி முடியும்... பயம் மறையும்... சுவாசம் சிவமாகும்... உயிர் ஒளியாகும்...
அதுவே...சித்தர்கள் அருளிய மரணமில்லாப் பெருவாழ்வு நோக்கிய பாதை.
நன்றி