Senthilvel Achari
4K views • 21 days ago
🙏 நாளை (14.8.2026 ஆடி கடைசி வெள்ளிக்கிழமை) ஆடிப்பூரம் திருநாள்.
"ஆடி பூரம்" என்பது அம்மன் மற்றும் ஆண்டாளுக்குரிய மிகச் சிறப்பு வாய்ந்த நாளாகும். இந்நாளில் அம்மன் கோயில்களில் வளைகாப்பு மற்றும் சிறப்புப் பூஜைகள் நடக்கும்.
இந்த நாளில் பெண்கள் விரதம் இருந்து அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் சாத்தி வழிபடுவதால், திருமணத் தடை நீங்கும், குழந்தைப்பேறு கிடைக்கும் மற்றும் மங்கலப் பலன்கள் பெருகும்.
*வழிபாட்டு முறைகள்*
*வளையல் சாற்றுதல்:*
அம்மனுக்கும், ஆண்டாளுக்கும் கண்ணாடி வளையல்கள் வாங்கிப் படைத்து, மற்ற பெண்களுக்குத் தானமாக வழங்கலாம்.
🙏 வீட்டு வழிபாடு.
அம்மன் படத்தை வைத்து மலர்களால் அலங்கரித்து, இனிப்புப் பால் மற்றும் கலவை சாதங்களை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.
🙏 கோயில் தரிசனம்.
அருகில் உள்ள அம்மன் அல்லது வைணவத் கோயில்களுக்குச் சென்று சிறப்பு அர்ச்சனை செய்து பிரசாதம் பெறலாம்.
நாளை அம்பாள் கோயில்களுக்குச் சென்று கண்ணாடி வளையல்களைச் சமர்ப்பித்து அர்ச்சனை செய்ய வேண்டும்.
சாற்றப்பட்ட வளையல்களைப் பிரசாதமாகப் பெற்று மற்ற சுமங்கலி மற்றும் கன்னிப் பெண்களுக்கு கொடுத்து நீங்களும் அணிவது மங்கலத்தைத் தரும்.
இது போன்று வீட்டில் அம்மன் படத்திற்கு வளையல் மாலை அணிவித்து எளிய முறையில் பூஜிக்கலாம்.
🙏வழிபாட்டின் முக்கிய பலன்கள்.
திருமணமாகாத பெண்களுக்கு விரைவாகத் திருமணம் கைகூடும்.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் அம்மனுக்கு வளையல்கள் சாற்றி வழிபாடு செய்வதால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கணவன் - மனைவி இடையே ஒற்றுமையும் அன்பும் அதிகரிக்கும்.
வீட்டில் சுபீட்சமும் மனஅமைதியும் நிலைக்கும்.
வாழ்க வளமுடன் 🙏
🙏 ஓம் சக்தி பராசக்தி 🙏
#🪷ஆடி பூரம்🌟 #🙏அம்மன் துணை🔱 #🛕பராசக்தி #🪔 ஆடி ஐந்தாம் வெள்ளி 🕉️ #🛕ஆடி மாத வழிபாடு🔔
23 shares