Murugan
சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “100 நாட்களில் போதைப்பொருள் புழக்கம் உருவாகவில்லை; 2020-க்கு முன்பாகத் தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாசாரம் என்ற ஒன்றே இல்லை” என்று சுட்டிக்காட்டினார். திமுக பற்றி அவர் பேசத் தொடங்கியதும் திமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில், "அங்கு 57 பேர்தான் இருக்கிறீர்கள், நாங்கள் அனைவரும் எழுந்தால் உங்களால் பேசவே முடியாது" என்று அவர் கூறியதால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பேச்சை ஏற்க முடியாது என்று தெரிவித்த பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜுனா, "எதிர்க்கட்சித் தலைவர் அரசின் மீது குற்றச்சாட்டுகளைக் கூறும்போது நாங்கள் அமைதியாக இருந்தோம்; நாங்கள் பேசும்போது அவர்கள் கேட்க வேண்டும்" என்று வலியுறுத்தியதோடு, இரண்டரை வயதுக் குழந்தை வன்கொடுமை வழக்கு உட்படப் பல்வேறு சம்பவங்களைக் குறிப்பிட்டு புகைப்பட ஆதாரங்களை உயர்த்திப் பேசித் தன் உரையைத் தொடர்ந்தார்.
#📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺 #📰தமிழக அப்டேட்🗞️ #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴