Murugan
தவெக எம்.எல்.ஏ சிந்து சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வதற்காகப் புதிய கார்களை வழங்கியதற்காக, முதலமைச்சருக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கும் விதமாகப் பாடல் ஒன்றை அவையில் பாடினார். "கொடுத்ததெல்லாம் கொடுத்தார், இவர் யாருக்காகக் கொடுத்தார்... ஒருத்தருக்காகக் கொடுத்தார் இல்லை, ஊருக்காகக் கொடுத்தார்" என்ற பாடலைப் பாடித் தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். இந்த நிகழ்வின் போது முதலமைச்சர் புன்னகையுடன் அதைக் கேட்டுக்கொண்டிருக்க, அவையிலிருந்த பிற உறுப்பினர்களும் கைதட்டித் தங்களது வரவேற்பைத் தெரிவித்தனர்.
#📺வைரல் தகவல்🤩 #📰தமிழக அப்டேட்🗞️ #📺உள்ளூர் தகவல்கள்📰 #🎥Trending வீடியோஸ்📺 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴