Mallika Kalidoss
539 views • 1 days ago
அனைவருக்கும் குறிப்பாக ஆசிரிய பெருந்தகை அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த நாள் எனக்கு பிடித்தநாள் காரணம் என் குடும்பமே கல்வி கற்பிக்கும் மகன் மகளை பெற்ற பெருமையுடன் பதிவு இந்த பதிவுல் ஒரு பாகஸ்ல படிங்க தெரியும் பாடம் மட்டும் நடத்துவதை மட்டுமே எந்த ஆசிரியர்களும் செய்யல அதோடு ஒவ்வொரு பிள்ளையின் அடுத்த பக்கத்தையும் பார்த்து ஸ்பெஷலா கவனிக்க ஆசிரியர்களால் மட்டுமே முடியும் இன்றைய காலசூழலில் குடும்ப சூழல் பிள்ளைகள் மனதை பாதிக்கின்றது அப்போ அந்த பிள்ளைக்கு தாயாகவும் கனிவுடனும் கற்பிக்கும் ஆசிரியைகள் அனைவரையும் வணங்குகிறேன் படிப்பு படிப்பு என பிள்ளைகளை கொடுமை படுத்தாதீர்கள் பெற்றோர்களே வாரத்தில் இரண்டு நாளாவது தெருவில் விளையாட விடுங்க பெற்றோருக்கு என் பணிவான வேண்டுகோள் இது படிப்பை மட்டுமே சொல்லி தந்த காலம் முடிந்து விட்டது இப்போ பிள்ளைகள் மனநிலையை முதலில் அறிந்து அதற்கேற்ப பாடம் சொல்லி தருபவரே நல்லாசிரியர் அதோடு ஆசிரியரிடம் குச்சியை பிடிங்கி விட்டீர்கள் மறுபடியும் தாருங்கள் யாரும் பிள்ளை பெறாதவர்கள் அல்ல சில பிள்ளைகளுக்கு பிடிவாதம் அதிகம் அதை களையெடுக்க இது தேவை நாங்க வாங்கிய அடி அதனால் அன்றைய பாடத்தை அன்றே படிக்கனும் என்பதை தெரிந்து கொள்ள உதவியது வாங்கிய முதல் அடியும் கடைசி அடியும் அதுவே இன்றும் டியூஷன் நடத்துகிறோம் பிள்ளைகளுக்கு பாடம் நடத்தும் நேரத்தை விட அவர்களுக்கு மற்ற விஷயங்களை நியூஸ் வரை பத்து நிமிடம் பேசுவேன் இது அவர்களுக்கு பொது அறிவு வளர உதவும் மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஆசிரியர்களை மதியுங்கள் உயரத்தில் உங்களை அமர வைப்பவர் அவரே நன்றி #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪
10 shares