Murugan
574 views • 4 days ago
#⚡ஷேர்சாட் அப்டேட் #📺வைரல் தகவல்🤩 #செய்திகளின் உலகம் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰தமிழக அப்டேட்🗞️ எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா நாடான காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்நிலையில், காங்கோவில் 4 ஆயிரத்து 381 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், எபோலா வைரஸ் பாதிப்பால் 2 ஆயிரத்து 11 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 704 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத்துறை திணறி வருகிறது.
காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2011 ஆக அதிகரிப்பு
13 likes
9 shares