திரைபாரதி
549 views • 7 hours ago
ஒரே ஒரு பொய்யில எல்லாம் போச்சி!
Audio Track:
https://drive.google.com/file/d/1dYx5csnbjTUkNjCo8TdfmrNrSsPhsVDa/view?usp=drivesdk
இது நடந்து 20 வருடங்கள் இருக்கலாம். அப்போதே செல்போன் பிரபலமாகிவிட்டது என்று சொல்லி நமச்சிவாயம் சார்வாள் கச்சேரியை ஆரம்பித்தார்:
ஊர் பேர் ஞாபகம் இல்லை, களக்காடு பக்கத்துல சின்ன ஊரு. அங்கன இருந்து அண்ணன் தம்பிக ரெண்டு பேரு மெட்ராஸ் ஹார்பர்ல காண்ராக்டர் ஒருத்தருகிட்ட வேலை கிடைச்சி சேந்தாக, பெறகு கல்யாணம் காட்சியெல்லாம் ஆச்சி. ரெண்டு பேருக்கும் தாம்பரத்துல வீடு.
ஒரு நாள் காலைல பெரியவன் கருப்பசாமி குளிச்சிட்டு இருக்கான். அவனுக்கு போன் வருது. பொண்டாட்டி போன எடுத்தா.
ஹலோ!
"இது கருப்பசாமி வீடுதானே?"
ஆமா, என்ன விஷயம்?
"அவரோட மாமா முருகேசன் அவருகிட்ட பேசணும்னு சொல்றார்."
அவர் வீட்டுல இல்லை.
போனை கட் செய்து விடுகிறாள். அவளுக்கு எப்படி இருக்கிறீர்கள், எங்கிருந்து பேசுகிறீர்கள் என்று கேட்கக்கூட விருப்பம் இல்லை.
நாம் சர்வ சாதாரணமாக குழந்தைகளின் எதிரிலேயே பொய் சொல்கிறோம். அதிர்ஷ்ட தேவதையே போனில் வந்து நமது வீட்டிற்கு வருவதற்கு வழி கேட்டாலும், எடுத்த எடுப்பிலேயே, "நாங்கள் வீட்டில் இல்லை, வெளியூரில் இருக்கிறோம்" என்று சொல்வதுதானே நமது வழக்கம்? கிட்டத்தட்ட இங்கும் அதுதான் நடந்தது.
பிறகு முருகேசனுக்கு, கூட வந்த பிரயாணி கருப்பசாமியின் தம்பி வெள்ளப்பாண்டிக்கு போனை போட்டு கொடுக்கிறார். அவரிடம் வெள்ளப்பாண்டி, "மாமா நீங்க வீட்டுக்கெல்லாம் தேடி வராதீக. நெல்லை எக்ஸ்பிரஸ்லதானே வந்தீக? அதே பிளாட்பாரத்துல ஏதாச்சும் ஒரு பெஞ்சில உக்காந்திருங்க. இன்னிக்கு ஞாயத்துக்கிளமதான, நானே வந்து கூட்டியாறேன்" என்று சொல்லிவிட்டான்.
வீட்டுக்கு வந்த மாமா குளித்து சாப்பிட்டுவிட்டு "செத்த நேரம் படுக்கிறேன், சாய்ந்தரம் கருப்பன் வீட்டுக்கு போவோம்" என்று சொல்லிப் படுத்தவர் மீளா தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். வெள்ளப்பாண்டிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மனைவியின் யோசனைப்படி முதலில், அவர் கொண்டுவந்த மஞ்சப்பையில் என்ன இருக்கிறது என்று பார்க்கிறார்கள்.
பையில் 2000 ரூபாய் கட்டுகள் மூன்று, அதாவது ₹6 லட்சம், சில்லறையாக ஒரு நாலாயிரத்தி சொச்சம், தங்கத்தினாலான தாலிக்கொடி, இரண்டு கம்மல் ஆகியவை இருந்தன. அண்ணனை கூப்பிட்ட வெள்ளப்பாண்டி பணம் மற்றும் நகை விஷயத்தைப்பற்றி மூச்சு விடாமல் மறைத்துவிட்டு, "இப்போது என்ன செய்வது?" என்று கேட்கிறான்.
கருப்பசாமி யோசனையுடன், "மாமாவுக்கு (தாய் மாமன்) நேரடி வாரிசு கிடையாது. அவரோட அண்ணன் தம்பிகளுக்குள்ளயும் பேச்சுவார்த்தை கிடையாது என்ன செய்யலாம்?" என்று கேட்கிறார். அதற்கு வெள்ளப்பாண்டி, "அப்பிடின்னா இங்கேயே கரண்ட் மயானத்துல எரிச்சி காரியம் பண்ணிட்டு பெரியமாமாவுக்கு தாக்கல் மட்டும் சொல்லிறலாம். மத்த ஏற்பாடுகள நானே பாத்துக்கிறேன்" என்று சொன்னதும் கருப்பசாமிக்கு பரம சந்தோஷம்.
முருகேசன் காடுகரைகளை வித்துட்டு பணத்தை ரெண்டா பிரிச்சி தங்கச்சி பசங்களுக்கு குடுத்துட்டு போகணும்னு வந்திருக்கார். அத வாங்குற கொடுப்பினை கருப்பசாமிக்கு இல்லை! ஒரே ஒரு பொய்யில எல்லாம் போச்சி! வீட்டுல இருந்துட்டே இல்லேன்னு சொன்ன சங்கதியும் கருப்பசாமி உளறுனதுல வெளுத்துருச்சி!
Gillette Guard Shaving Razor #Ad
https://link.amazon/B02hnXF40
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
12 likes
12 shares