Murugan
சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரையில், முன்னாள் படை வீரர்கள், மாற்றுத்திறனாளி வீரர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்களின் நலனுக்காகப் பல்வேறு முக்கிய நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாடு முன்னாள் படை வீரர்களின் இரண்டு மகள்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதோடு, மாற்றுத்திறன் கொண்ட படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசால் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.23,000 ஆகவும், அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ.12,500 ஆகவும் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, விடுதலைப் போராட்டத் தியாகிகளான வீரபாண்டிய கட்டபொம்மன், முத்துராமலிங்கம், மருது சகோதரர்கள் மற்றும் வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் வழிதோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்த்தப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
#🎥Trending வீடியோஸ்📺 #📺வைரல் தகவல்🤩 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴