Murugan
542 views • 1 days ago
*மாம்பலம் பகுதியில் மதுபாரில் வீண்தகராறு செய்து ஒருவரை கத்தியால் தாக்கிய 3 நபர்கள் கைது
*.
சென்னை, கொளத்தூர், லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வரும்
வெங்கடேஷ், வ/29, த/பெ.சண்முகம் என்பவர் மதனகுப்பத்தில் கார் சர்வீஸ் கடை நடத்தி வருவதாகவும், வெங்கடேஷ் கடந்த 03.09.2026 அன்று
இரவு அவரது நண்பரின் பிறந்த நாளை முன்னிட்டு, நண்பர்களுடன் சென்று மாம்பலம் பகுதியில் உள்ள தனியார் பாரில்
மது அருந்திக்கொண்டிருந்த போது, அங்கு அருகில் மது அருந்திக்கொண்டிருந்த 3 நபர்கள் அவர்களுக்குள்
தகராறில் ஈடுபட்டு அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். உடனே அருகில் இருந்து வெங்டேஷ் சண்டை போடதீர்கள் என
கூறி விலக்கிவிட்டு, வெளியே போய் சண்டை போடுங்கள் என்று கூறியதும், அந்த நபர்கள் உன்
வேலையை பாருடா என கூறி வீண்தகராறு செய்து வெங்கடேஷை கையால் தாக்கியுள்ளனர். உடனே வெங்கடேஷ்
பிரச்சனை செய்ய வேண்டாம் என நினைத்து அவரது நண்பர்களுடன் சேர்ந்து பாரிலிருந்து வெளியே வந்த போது மேற்படி 3
நபர்களும் பின்தொடர்ந்து வந்து வெங்கடேஷை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
தாக்குதலில் இரத்தகாயமடைந்த வெங்கடேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, தன்னை தாக்கிய நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை
எடுக்கும்படி கொடுத்த புகாரின் பேரில் R-1 மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
R-1 மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகள் 1.அருண்குமார், வ/26, மேற்கு மாம்பலம், சென்னை 2.மணிகண்டன், வ/23, நந்தனம், சென்னை 3.நீத்திஸ்குமார், வ/26, நந்தனம், சென்னை ஆகிய 3 நபர்களை நேற்று (04.09.2026) கைது செய்தனர். அவர்களிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட அருண்குமார் மற்றும் மணிகண்டன் மீது ஏற்கனவே தலா ஒரு குற்ற வழக்கு உள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்ற (04.09.2026)நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். #📺வைரல் தகவல்🤩 #📺உள்ளூர் தகவல்கள்📰 #🎥Trending வீடியோஸ்📺 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
17 shares