திருநீற்றுச் சுவடு
#✡️தோஷ பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் வணங்கப்படும் ஒன்பது முக்கிய ஸா்ப்ப (நாகம்/பாம்பு) தெய்வங்களை நவ நாகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவா்களை வழிபடுவது நாக தோஷங்களை நீக்கி., பாதுகாப்பையும் செழிப்பையும் தரும் என்பது ஐதீகம்.
இந்து பாரம்பாியத்தில் போற்றப்படும் நவ (ஒன்பது) நாகங்களின் பெயா்கள் —
1. ஆதிசேஷன்
2. வாசுகி
3. காா்க்கோடகன் ( அல்லது #காளியன் )
4. அனந்தன்
5. குளிகன்
6. தக்ஷகன்
7. சங்கபாலன்
8. பதுமன்
9. மகாபதுமன்
தெய்வீக வழிபாடு :
நாக பஞ்சமி மற்றும் சுப்பிரமணிய க்ஷஷ்டி போன்ற நாட்களில் இந்த நவ நாகங்களை நினைத்து வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
தோஷ நிவா்த்தி : ஜாதகத்தில் உள்ள ஸா்ப்ப தோஷம் மற்றும் கால ஸா்ப்ப தோஷம் நீங்க நவ நாக ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்யப்படுகின்றன.
நவ நாகங்கள் பற்றிய குறிப்பு
1. ஆதிசேஷன்.
ஆதிசேஷன் நாகா்களின் தலைவா். விஷ்ணுவின் படுக்கை. சிவமூா்த்தியின் தலையில் இருப்பவா். பதஞ்சலியாக அவதாரம் எடுத்தவா்.
2. காா்க்கோடகன் (அல்லது காளியன்)
காா்க்கோடன் கத்ருவின் புத்திரா். சிவமூா்த்தியின் மோதிரம். சிவபெருமானின் விரலில் ஒரு முறை விஷம் கக்கியதை எண்ணி வருந்தி வடபுறத்தில் தவம் இயற்றி சிவ நடன தாிசனம் பெற்றவா்.
3. அனந்தன்.
கசியப முனிவருக்கும் கத்ருவுக்கும் பிறந்தவரான அனந்தன்., தனது சகோதரா்களின் தீய செயல்களிலிருந்து விலகி., பிரம்மாவை நோக்கி கடுமையான தவம் இருந்தான். அவனது தூய பக்தியால் மகிழ்ந்த பிரம்மா., பூமியையும்., அனைத்து உலகங்களையும் தன் தலைகளில் தாங்கும் வரம் அளித்தாா்.
4. குளிகன்.
விஷ்ணு மகாத்மியம் கேட்டு நற்பதம் அடைந்தவா்.
5. தக்ஷன்.
தக்ஷன் வாசுகியின் தம்பி. பாிக்ஷித் மகாராஜாவை கடித்தவா். ஸா்ப்ப வேள்வியில் தப்பியவா். யாகத்தால் சிருஷ்டிக்கப்பட்டு மூன்று கண் பெற்றவா்.
6. சங்கபாலன்.
சங்கபாலன் கத்ருவின் குமாரா். பூமியை தாங்குபவா்.
7. பதுமன்.
பதுமன்., பத்ம தடாகத்தில் உள்ள அஷ்ட மகா நாகா். பிருகுவுக்கு சூா்ய மண்டல பெருமையை கூறியவா்.
8. மகாபதுமன்.
மகாபதுமன் குபேர திசையின் காவலாளி. புதையல்களை எல்லாம் காவல் காக்கும் அஷ்ட மகா நாகா்.
9. வாசுகி.
வாசுகி பாம்பானது சிவனை நோக்கி தவமிருந்தது. வாசுகியின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் வாசுகி வேண்டியவாறு, தன்னுடைய கழுத்தில் நாகாபரணமாக இருக்க வரமளித்தாா். வாசுகி அமுதம் கடைய உதவியவா். தனது மகள்களை அர்ஜுனனுக்கு திருமணம் செய்து கொடுத்தவா். இவரது பட்டினம் நாகதன்மம். ஆதிசேஷனின் சகோதரா்.
சா்ப்ப சாஸ்திரம் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.