Barakath Ali
572 views • 8 days ago
பழைய பேப்பர்!
ஷோபாவும் நானும் - பாலுமகேந்திரா!
’ஷோபாவும் நானும்’ என்ற தலைப்பில் 'குமுதம்' வார இதழில் ஒரு தொடரை பாலுமகேந்திரா எழுதினார்.
1980-ல் பிரபல நடிகை ஷோபா தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து பத்திரிகைகளில் பல்வேறு ஊகங்களும் விமர்சனங்களும் எழுந்தன. அதற்குப் பதிலளிக்கும் விதமாகவும், தங்களுக்குள் இருந்த உறவை விளக்கும் வகையிலும் பாலுமகேந்திரா அந்த தொடரை எழுதினார்.
ஷோபாவுடனான பாலுமகேந்திரா உறவும் அதன் பிறகு நடந்த திருமணமும் அதனைத் தொடர்ந்து ஷோபாவின் தற்கொலையும் அன்றைக்கு பேசுபொருளானது. சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற ஷோபா தற்கொலை செய்துகொண்டபோது, அவரது மரணம் குறித்துப் பலத்த சர்ச்சைகள் எழுந்தன. அன்றைக்கு இருந்த ஆட்சியாளர்கள் உட்படப் பலரும் பாலுமகேந்திரா மீது சந்தேகம் கொண்டனர். இந்தச் சூழ்நிலையில்தான் பாலுமகேந்திராவின் தரப்பு நியாயத்தையும் அவர்களின் காதலையும் உலகிற்கு உரக்கச் சொன்னது ’ஷோபாவும் நானும்’ தொடர்.
ஷோபாவுக்கும் தனக்குமான கலை சார்ந்த மற்றும் தனிப்பட்ட ஆத்மார்த்தமான உறவை உருக்கமாக விவரித்திருந்தார் பாலுமகேந்திரா.அழியாத கோலங்கள், மூடுபனி போன்ற படங்களின் உருவாக்கத்தின் போது ஏற்பட்ட நெருக்கத்தையும் இருவருக்குமான காதல் மற்றும் திருமணம் எப்படி நிகழ்ந்தது? என்பதையும் தொடரில் பகிர்ந்துகொண்டார். வதந்திகளால், தான் அடைந்த மனவேதனையையும் ஷோபாவின் இழப்பு தனக்கு ஏற்படுத்திய பெரும் பாதிப்யையும் பதிவு செய்திருந்தார்.
பாலுமகேந்திரா மீது பத்திரிகைகளும் பொதுமக்களும் வைத்த கடுமையான விமர்சனங்களையும் கொடூரமான வதந்திகளையும் ’ஷோபாவும் நானும்' தொடர் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தின. அன்றைய குமுதம் வாசகர்களிடையே தொடர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பாலுமகேந்திரா மீது ஒரு பரவலான அனுதாப அலையையும் உருவாக்கியது. இது வெறும் கட்டுரைத் தொடராக இல்லாமல், ஒரு கலைஞன் தன் காதலிக்கு எழுதிய கண்ணீர் அஞ்சலியாகவும், சுய வாக்குமூலமாகவும் பார்க்கப்பட்டது.
ஷோபாவின் தற்கொலைக்கு பிறகு அவருடைய தயார் பிரேமாவும் மகள் இறந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். #🥰80s-90s கதாநாயகிகள் #🥰80s-90s கதாநாயகிகள் #🎬 சினிமா #🧑எனக்கு பிடித்த நடிகர் #💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔 #💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔
6 shares