தமிழ்சீயான்43
1K views • 7 hours ago
🌿 இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
18.08.2026 (செவ்வாய்)
துயர்நிறை மறையுண்மைகள்.
முதலாவது. கெத்சமணித் தோட்டத்தில் ஆண்டவர் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்
"நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார்." என கூறப்பட்டுள்ளதை நாம் வாசித்தோம்.
மனிதகுல மீட்பிற்காக தன் ஒரே திருமகனை ஏழ்மை நிலைக்கும், துன்பத்திற்கும் உட்படுத்திய நம் தந்தையின் அளவற்ற அன்பிற்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
இரண்டாவது. ஆண்டவர் இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
" என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நில புலங்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்." என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
இவ்வுலகில் இறைவனுக்காக இழக்கும் ஒவ்வொன்றும் விண்ணக வாழ்வுக்கான அடித்தளம் என்ற உண்மையை உணர வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
மூன்றாவது. ஆண்டவர் இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
ரோமப் பேரரசியும், இன்றையப் புனிதருமான புனித ஹெலெனா, தனது ஜெருசலம் புனிதப் பயணத்தின் போது ஆண்டவர் இயேசு அறையப்பட்ட திருச்சிலுவையைக் கண்டுபிடித்தார்.
கிறித்துவர்களின் அடையாளமாக விளங்கும் திருச்சிலுவையின் மாட்சியை மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளவும், திருச்சிலுவை பக்தி பெருகிடவும் இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
நான்காவது. ஆண்டவர் இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
இந்த ஆண்டு இறைவன் நமக்கு நல்ல பருவ மழையைத் தந்தருள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஐந்தாவது. ஆண்டவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய்க் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க
வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #பிரார்த்தனை
14 shares