Senthilvel Achari
574 views 7 hours ago
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, ஆகஸ்ட் 15 அன்று காலே மைதானத்தில் தொடங்க உள்ளது. வழக்கமாக சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாகவும், வறண்ட தன்மையுடனும் காணப்படும் காலே ஆடுகளம், இந்த முறை இரு அணிகளுக்கும் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. காலே ஆடுகளம் முதல் நாளில் இருந்தே சுழலும் தன்மை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய ஆடுகளத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. மேலும், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) ஆடுகளத்திற்கு அதிகளவில் தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளது. இதனால், ஆடுகளம் முதல் நாளில் இருந்தே உடைந்து சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக மாற வாய்ப்பில்லை. மாறாக, முதல் 2 நாட்களுக்குப் பேட்டிங் செய்வதற்கு இது மிகவும் சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆட்டம் செல்லச் செல்லவே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் சாதகமாக மாறும். #😍இலங்கை vs இந்தியா - முதல் டெஸ்ட்🏏 #📺வைரல் தகவல்🤩 #🏏 கிரிக்கெட் #🏏கிரிக்கெட் தருணங்கள்🔥 #🇮🇳நம்ம இந்திய அணி💙
11 likes
9 shares

More like this