꧁𝙆𝘼𝙇𝘼𝙄𝙎𝙀𝙇𝙑𝘼𝙉꧂
#🌎பொது அறிவு
*💫🌹இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல் பிறந்த நாள் ஆகஸ்ட் 8,*💫🌹
சுதந்திரத்திற்கு முன்பிருந்த ஒன்றுபட்ட இந்தியாவின், தற்கால பாகிஸ்தானின் லாகூரில் பி. டி. ஷர்மா என்பரை தனது 16 வயதில் மணந்த சரளா 1914 இல் பிறந்தவர்.
இவரது கணவர் குடும்பத்தினருக்குச் சொந்தமாக ஹிமாலயா ஃப்ளையிங் கம்பெனி (Himalaya Flying Company) என்ற விமான நிறுவனம் இருந்தது இவரது கணவர் பி. டி. ஷர்மாதான். அவர் கராச்சிக்கும் லாகூருக்கும் இடையில் பறக்கும் விமானத்தின் விமானியாகப் பணிபுரிந்து வந்தார்.
சரளாவையும் விமானியாக்குவதில் அவரது கணவரும் கணவரின் தந்தையும் ஆர்வமுடன் இருந்தனர். ஷர்மாவின் தந்தை சரளாவை லாகூர் ஃப்ளையிங் கிளப் -இல் சேர்த்து டிம்மி தஸ்த்தூர் என்ற பயிற்சியாளரிடம் சேர்த்துவிட்டார் . பயிற்சியாளர் தஸ்த்தூர், சரளாவிற்கு சரியாக 8 மணி 10 நிமிடங்கள் பயிற்சி அளித்த பிறகு தனியாக விமானத்தை இயக்க அனுமதி கொடுத்தார்.
தனது கணவர் பணியிலிருந்து வரும்வரைக் காத்திருந்து அவரது அனுமதியுடன் 1936 ஆண்டு ஜிப்சி மாத் என்ற சிறுவகை விமானத்தில் சரளா தனியாகப் பறந்தார். அப்பொழுது சரளாவிற்கு வயது 21 தான். தான் வழக்கமாக அணியும் புடவையிலேயே விமானியாகப் பறந்தார்.
பெண்களின் வெளியுலக வாழ்க்கை போற்றப்படாத அக்காலத்தில், தான் விமானி பயிற்சி பெறத் தனது குடும்பம், கணவர், உடன்பயின்ற மாணவர்கள், ஆசிரியர் என அனைவரும் மிகவும் ஆதரவு கொடுத்ததாக இவர் கூறுகிறார். என்றாலும் இவர் எந்த விமான நிறுவனத்திலும் விமானியாக பணியாற்றவில்லை
சரளா தனது வாழ்நாட்களின் பிற்பகுதியில் ஆடை ஆபரணங்களை வடிவமைக்கும் பணியில் முழு ஈடுபாடு காட்டினார். அச்சுப்பட்டை ஓவியங்களால் இவர் வடிவமைத்த சேலைகளும், கைவினை ஆபரணங்களும் பலராலும் விரும்பப்பட்டன.
அவரது வாடிக்கையாளர்களில் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜயலக்ஷ்மி பண்டிட் குறிப்பிடத் தகுந்த ஒருவர்