⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
ஹயக்ரீவ ஜெயந்தி ,(27 08.2026)ஆவணிஅவிட்டம்
Rig வேதம் 26.08 2026
Yajur வேதம் 27.08.2026
•
இந்த ஆண்டு ஹயக்ரீவ ஜெயந்தி ஆகஸ்ட் 27 ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஹயக்ரீவர் ஜெயந்தி அன்று வேதங்களையும் வழிபட வேண்டும். பிரம்ம தேவர் இந்த நாளில் தான் வேதங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதாக ஐதீகம். அதனாலேயே ஆவணி மாத பெளர்ணமி நாளில் பிரமாணர்கள் வேதங்களை படிக்க துவங்குவதற்கான நாளாக வைத்துள்ளனர்.
பெரும்பாலும் பெருமாள் கோவில்களில் லட்சுமி தேவி தனி சன்னதியிலேயே காட்சி தருவார். ஆனால் ஹயக்ரீவர் ரூபத்தை தரிசிக்கும் போது லட்சுமி தேவி எப்போதும் அவரது மடியில் அமர்ந்த நிலையிலேயே காட்சி தருவார். ஹயக்ரீவர் ஞானத்தின் கடவுளாக போற்றப்படுகிறார். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவிக்கே ஞானத்தை போதித்தவர் ஹயக்ரீவர் தான் என புராணங்கள் சொல்கின்றன. கல்வியில், வேலையில் வெற்றி பெற வேண்டும், உயர்வான நிலையை அடைய வேண்டும் என்பவர்கள் ஹயக்ரீவரை வழிபடுவது சிறப்பானதாகும்.
அம்பிகையின் நாமங்களை உலகம் அறிய வேண்டும் என்பதற்காக அகத்திய முனிவர் மூலம் லலிதா சகஸ்ரநாமத்தை அருளியவரும் ஹயக்ரீவரே. ஹயர்க்ரீவர் கல்வி கடவுளாக மட்டுமின்றி, லட்சுமி தேவி உடன் இருப்பதால் இவர் செல்வத்திற்குரிய தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறார். ஹயக்ரீவரின் அருள் பார்வை அனைவரையும் குளிர செய்யும் தன்மை கொண்டதாக புராணங்கள் சொல்கின்றன.
ஹயக்ரீவ மந்திரம் :
•
"ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே"
புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வீட்டில் நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து, ஏலக்காய், கற்கண்டு கலந்த பால் நைவேத்தியமாக படைத்து இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறை சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்லி வந்தால் தடைகள் விலகும், நோய்கள் நீங்கும்.
•
குதிரை முகம் ஏன்?
•
உலகிலேயே வேகமாக ஓடக் கூடிய மிருகம் சிறுத்தை தான் என்றாலும், இயந்திரங்களின் வேகத்தை சொல்லும் போது குதிரையின் வேகம் (horse power) என்று தான் குறிப்பிடுவார்கள். இதற்கு காரணம் குதிரைக்கு இருக்கும் தனித்திறமையாகும். குதிரைக்கு கேட்கும் திறன் அதிகம். தனது காது மடல்களை 180 டிகிரி வரை திருப்ப முடியும். பாலூட்டிகளில் குதிரையின் கண்ணே பெரியதாகும். இதனால் தலையை திருப்பாமலேயே 350 டிகிரி கோணம் வரை கூட ஒற்றை கண் பார்வையை திருப்ப முடியும். குதிரையின் தொடு திறனும் மிகவும் நுட்பமானதாகும். கண், காது, மூக்கு ஆகியவை மிகவும் நுட்பமானவையாகும். மணிக்கு 6.5 கி.மீ., வரை செல்லக் கூடிய தன்மை குதிரைக்கு உண்டு. அதனாலேயே குதிரையின் முகத்தை கொண்ட ஹயக்ரீவர் வழிபாடு ஞானத்தை அளிப்பதாக உள்ளது.
• ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நமக்கு கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். அந்த சரஸ்வதி தேவியின் குருவாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார்.ஸ்ரீஹயக்ரீவர் ஆலயங்கள்
‘ஓம் வாகீஸ்வராய வித்ம ஹேஹயக்ரீவாய திமஹி தன்னோ ஹம்ஸ ப்ரசோதயாத்'
என்ற ஹயக்ரீவ காயத்ரி மந்திரத்தை மாணவர்கள் தினமும் சொல்லி வந்தால்,கல்வியில் கவனமும் நாட்டமும் அதிகரித்து அதிக மதிப்பெண் பெறலாம். செங்கல்பட்டு அருகில் செட்டிப் புண்ணியம், கடலூர் அருகில் திருவந்திபுரம், பாண்டிச்சேரி அருகில் முத்தியால்பேட்டை ஆகியவை ஹயக்ரீவருக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன. வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவரை வணங்கலாம். கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். நாளை ஹயக்ரீவ ஜெயந்தி நாளில் அவரை வழிபட்டு அருள் பெறுவோம்
ஆவணி அவிட்டம்
வேதம் கற்பவர்களுக்கு மிக முக்கியமான நாளாக ஆவணி அவிட்டம் விளங்குகிறது. ரிக், யஜூர் வேதங்கள் கற்பவர்கள் இந்த நாளில் கற்க துவங்குவார்கள். வேதங்கள் அவதரித்த நாளாக ஆவணி அவிட்டம் கருதப்படுவதால் இந்த வேதங்களை போற்றி, பூஜித்து, வணங்கும் நாளாகவும் இது உள்ளது
ரிக், யஜூர் வேதம் பயின்ற வேதியர்கள் மட்டுமே பூணூல் மாற்ற பயன்படுத்திக் கொள்ளும் நாளாக ஆவணி அவிட்டம் உள்ளது. வேதங்களை வழிபடுவதற்குரிய இந்த நாள் இந்த ஆண்டு எந்த நாளில் வருகிறது, பூணூல் மாற்றிக் கொள்ள நல்ல நேரம் எது, இந்த நாளில் நடத்தப்படும் உபகர்மா சடங்கி முக்கியத்துவம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.ஆவணி அவிட்டம் என்றால் என்ன ?
ஆவணி அவிட்டம் என்பது பிராமண குலத்தவர்களின் மிக முக்கியமான நாளாகும். இந்த நாளில் பூணூல் மாற்றிக் கொள்ளுவது வழக்கம். ஆவணி மாதத்தில் பெளர்ணமியும், அவிட்டம் நட்சத்திரமும் இணைந்து வர நாளையே ஆவணி அவிட்டமாக கொண்டாடுகிறோம். இது வேதங்கள் அவதரித்த நாளாகவும், இந்த நாளில் தான் பெருமாள் ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து, வேதங்களை அசுரர்களிடம் இருந்து மீட்டதாகவும் புராணங்கள் சொல்கின்றன. அதனால் இதை ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கொண்டாடுவது உண்டு. ஆவணி அவிட்டம் அன்று ஏதாவது கோவிலோ அல்லது நீர் நிலைகளுக்கு அருகிலோ புரோகிதர்கள் ஒரு குழுவாக அமர்ந்த மந்திரம் சொல்லி பூணூலை மாற்றிக் கொள்வார்கள்.
உபகர்மா என்றால் என்ன?
இப்படி பூணூல் மாற்றும் சடங்கிற்கு பிறகு, புதிதாக வேதங்கள் கற்க துவங்குபவார்கள். இதற்கு உபகர்மா என்று பெயர். கர்மா என்றால் கண்கள் என்று பொருள். உபகர்மா என்றால் நமக்கு இருக்கும் இரண்டு கண்களுடன் சேர்த்து, இறைவனை அறிவதற்கு மூன்றாவதாக ஞானம் என்ற கண் தேவை. அந்த கண்ணை வேதங்களை கற்பதின் மூலமே பெற முடியும். இறைவனும் மனிதனுக்கும் இடையே ஒரு பந்தத்தை ஏற்படுத்தவும், அதற்கு வழிகாட்டுவதற்கும் செய்யப்படும் சடங்கே உபகர்மா என்று சொல்கிறோம்.
ஆவணி அவிட்டம் முக்கியத்துவம் :
ரிக்,யஜூர், சாம, அதர்வணம் என்று நான்கு வகையான வேதங்கள் உண்டு. இவற்றில் ரிக், யஜூர் ஆகிய இரண்டு வேதங்களும் மேஷம் துவங்கி துலாம் வரையிலான ராசிகளுக்கு உரியவை. சூரிய பகவான், சிம்ம ராசியில் பயணிக்கும் ஆவணி மாதத்தில் ரிக், யஜூர் வேதங்கள் தோன்றியதாக சொல்லப்படுகிறது. இந்த வேதங்களை கற்றவர்கள் தங்களை புதுபித்துக் கொள்ளும் நாளாக ஆவணி அவிட்டம் சொல்லப்படுகிறது. புதிதாக வேதம் கற்பவர்கள் இந்த நாளில் துவங்குவது வழக்கம்.
நாராயண🙏நாராயண🙏 #🔍ஜோதிட உலகம் 🌍 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #🙏கோவில் #✨கடவுள் #✡️ஜோதிட பரிகாரங்கள்