MUTHUPANDIAN RAMKUMAR
955 views • 8 days ago
#🙏🌺மகாலட்சுமி 🌺🙏 #மகாலட்சுமி உடலில் வாசம் செய்யும் சித்த அஷ்ட லஷ்மி (ரகசியம்) தெரியுமா?
நம் பாதங்களில் வசிப்பவள் *ஆதிலஷ்மி.*
நம் பாதம் பிறர் மீது தெரியாமல் பட்டால் ராம் ராம் எனக் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் ஆதிலஷ்மி நம்மை விட்டு விலகி விடுவாள்.
நம் முழங்கால் பகுதியில் வசிப்பவள் *கஜலஷ்மி*.
காலை நீட்டியபடி புத்தகம் படிப்பதாலும்
நெல்,அரிசி இவைகளை கால்களால் மிதிப்பதாலும் நம்மை விட்டு *கஜலட்சுமி விலகுகிறாள்.
நம் இடுப்புக்கு கீழ் பகுதியில் *வீர்யலஷ்மி* வசிக்கிறாள்.
பிறரை நித்திப்பதன் மூலம் சாபம் பெறுபவர்களை விட்டு இந்த *வீர்யலஷ்மி விலகுகிறாள்.
நம் இடது தொடையில் வசிப்பவள் *விஜயலஷ்மி.*
இடது தொடை எப்போதும் மனைவிக்குச் சொந்தம்.எனவே மனைவியை விடுத்து பிறன்மனை நோக்கினால் இந்த விஜயலக்ஷ்மி* விலகி விடுவாள்.
வலது தொடையில் வசிப்பவள் *சந்தானலஷ்மி.*..!
பெற்றோர்கள் கன்னிகாதானம் செய்யும்போது பெண்ணை வலது தொடையில் அமர வைக்க வேண்டும்.
இடது தொடையிலோ,இரு தொடைகள் இடையே அமர வைத்தால் இந்த *சந்தானலஷ்மி விலகி விடுவாள்.
நமது வயிற்றுப் பகுதியில் வசிப்பவள் *தான்யலஷ்மி.*..!
எச்சில் உணவு,ஊசிப் போன உணவு இவைகளை ஏழைக்களுக்கோ, பிறருக்கோ கொடுத்தால் இவள் விலகி விடுவாள்.
நமது நெஞ்சுப் பகுதியில் வசிப்பவள் *தைரியலஷ்மி..*!!
நெஞ்சிலே நஞ்சை வைத்து பிறரைக் குறை கூறி குடும்பத்தை கெடுப்பவர்களை விட்டு இவள் விலகுகிறாள்.
நமது கழுத்துப் பகுதியில் வசிப்பவள் *வித்யாலஷ்மி*
கழுத்தில் ருத்ராட்சம் அணியாதவர், பூணல்,தாலி,துளசி மணி என குடும்ப பராம்பரிய சின்னத்தை
அணியாதவர்களை விட்டு இவள் விலகுகிறாள்.
நம் நெற்றியின் மத்தியில் வசிப்பவள் *செளபாக்யலஷ்மி.!!*
இவள் நம் புருவத்தை சிரைப்பதாலும் மஞ்சள் கலந்த குங்குமம் விட்டு ஸ்டிக்கர் பொட்டு வைப்பதாலும்,வகிட்டில் குங்குமம் வைக்காமல் இருப்பதாலும், வீபூதி,திருமண்,சந்தனம் அணியாவிட்டாலும் நம்மை விட்டு விலகுகிறாள்.
*பல தவறுகள் செய்து நம் அங்கத்தில் இருக்கும் லஷ்மிகளை விரட்டி விட்டால் நாம் எப்படி செழிப்பாக வாழ முடியும்.?.
27 shares