Murugan
சட்டமன்றத்தில் விவாதத்தின் போது, ஆளும்கட்சி உறுப்பினர்கள் எந்தவொரு குற்றச்சாட்டையும் ஆதாரத்துடன் பேச வேண்டும் என திமுக எம்.எல்.ஏ ஐ.பெரியசாமி வலியுறுத்திய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் பேசினார். "ஆதாரம், ஆதாரம் என்று கேட்கிறார்கள்; ஒரு வாரத்திற்கு முன்பு மாண்புமிகு நிதியமைச்சர் பேசும்போது '3 துறைகளை ஆராய்ந்து அதற்கான கோப்புகளை வைத்திருக்கிறோம்' என்றார். அவர் அதைப்போகின்ற போக்கில் சொல்லவில்லை. உண்மையிலேயே அத்தனையும் ஆதாரங்களுடன் என் மேஜையில் இருக்கிறது. எங்களை அதை ஓப்பன் பண்ண வைத்துவிடாதீர்கள்; எதை எப்போது ஓப்பன் செய்ய வேண்டுமோ, அதை அப்போது சரியாக ஓப்பன் செய்வோம்" என்று அதிரடியாகத் தெரிவித்து அவையில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎥Trending வீடியோஸ்📺 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📺வைரல் தகவல்🤩 #📰தமிழக அப்டேட்🗞️