திரைபாரதி
629 views • 3 days ago
மகளுக்காக ஒரு புதிய வாழ்க்கை...
Audio Track:
https://drive.google.com/file/d/1O4tYgxcpqyGkK4LVnHQiSggi1V55FHEP/view?usp=drivesdk
Transcript:
பஞ்சாயத்து நடக்கிறது.
ராதிகாவின் அப்பாவும் அம்மாவும் எதிரெதிர் திசையில் இருக்கிறார்கள். நடந்த பஞ்சாயத்தில் இருவரும் கிட்டத்தட்ட விவாகரத்து செய்யும் முடிவை எட்டிவிட்டார்கள். ராதிகா தனியாக அமர்ந்திருக்கிறாள். பஞ்சாயத்து தலைவர் முடிவை அறிவிக்க எழுகிறார்.
நீங்கள் இருவரும் விவாகரத்து செய்வதில் உறுதியாக இருக்கிறீர்கள். பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் உங்களுடைய மகள் தன்னுடைய பராமரிப்பில்தான் இருக்கவேண்டும் என்பதில் இருவருமே கராறாக இருக்கிறீர்கள். ராதிகாவும் விவரம்தெரிந்த பெண் என்பதால் அதை அவளே முடிவு செய்யட்டும்.
ராதிகா எழுந்து "பஞ்சாயத்தார் என்னுடைய கருத்தை இன்னும் கேட்கவில்லையே!" என்கிறாள்.
நீ என்ன சொல்கிறாய் அம்மா?
"நான் அம்மா அப்பா இருவரிடமும் மூன்று கேள்விகள் கேட்க விரும்புகிறேன்."
தாராளமாகக் கேளம்மா!
"என்னைப் பெற்றதில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கனா? என்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினீர்களா? நான் உங்களை கடைசிவரை காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கையில் என்னை உங்களுடன் வைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா?"
ராதிகாவின் கேள்விளுக்கு நீங்கள் சொல்கிற பதில்களை வைத்துதான் ராதிகா மட்டுமல்ல பஞ்சாயத்தாரும் ஒரு முடிவுக்கு வரவேண்டும். எனவே, பூசி மெழுகாமல் "ஆம்" அல்லது "இல்லை" என்று மட்டும் தனித்தனியாக பதில் கூறவும்.
இருவரும் ராதிகா கேட்ட முதல் இரண்டு கேள்விகளுக்கு "ஆம்" என்றும், மூன்றாவது கேள்விக்கு "இல்லை" என்றும் பதில் சொல்கிறார்கள்.
ராதிகா, உன் பெற்றோர் நீ கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டார்கள். இப்போது நீ என்ன சொல்கிறாய்?
"முதல் கேள்விக்கான பதில் உண்மை என நம்புகிறேன். இரண்டாவது கேள்விக்கான பதில், "ஆம்" என்பது உண்மையாக இருந்தால், நான் மகிழ்ச்சியாய் இருப்பது "சேர்ந்து வாழும் அவர்களுடன் நான் வாழ்வதில்" இருக்கிறது.
மூன்றாவது கேள்விக்கு இல்லை என்று அவர்கள் கூறுவது ஆறுதல் அளிக்கிறது. எனவே, அவர்கள் சேர்ந்துவாழ விரும்பாவிட்டால் நான் அவர்களில் ஒருவருடைய பராமரிப்பில் வாழ விரும்பவில்லை; விடுதியில் இருக்கிறேன்."
உங்களுடைய பெண் சொல்வதைக் கேட்டீர்களா? உங்களால் பிரிந்து இருக்க முடியும் என்றால், உங்களைப் பிரிந்து அவளாலும் இருக்க முடியும் என்று தெளிவாகக் கூறிவிட்டாள். மூன்றுபேரும் மூன்று திசைகளில் செல்வதாக முடிவெடுக்கிறீர்களா?
ராதிகாவின் அப்பாவும் அம்மாவும் அவளை நோக்கி ஓடிவந்து கட்டிப்பிடித்துக் கொள்கிறார்கள். விவாகரத்து பத்திரங்கள் கைநழுவி கீழே விழுகின்றன.
நீங்கள் இருவரும் 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்ததற்கு ராதிகா சாட்சி. அவள் மிகவும் புத்திசாலி. அவளுடைய கேள்விகளின் பதில்தான் இந்த புதிய வாழ்க்கை. நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து, பழையதை மறந்து மகளுடன் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன்.
Lux Cozi T Shirts #Ad
https://amzn.to/4f6mqvg
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
8 shares