A Mohan Raj
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
*பன்னிரெண்டாம் திருமுறை*
*பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.*
*பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.*
*காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.*
*முதற் காண்டத்தில்,
திருமலைச் சருக்கம்,
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்,
இலை மலிந்த சருக்கம்,
மும்மையால் உலகாண்ட சருக்கம்,
திருநின்ற சருக்கம்
என்ற ஐந்து சருக்கங்களும்,*
*இரண்டாம் காண்டத்தில்,
வம்பறா வரிவண்டுச் சருக்கம்,
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்,
பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்,
கறைக்கண்டன் சருக்கம்,
கடல்சூழ்ந்த சருக்கம்,
பத்தராய்ப் பணிவார் சருக்கம்,
மன்னிய சீர்ச் சருக்கம்,
வெள்ளானைச் சருக்கம்
என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.*
*இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.*
இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர்
இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி
அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம்
பதிகம் பற்றிய சுருக்கமான
*பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்*
திருநின்ற சருக்கத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் என்பது சேக்கிழார் பெருமானால் அருளப்பட்ட பெரியபுராணம் நூலில் இடம்பெறும் மிக முக்கியமான புராணங்களில் ஒன்றாகும். இது அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனாரின் புகழையும், அவரது இறைத் தொண்டுகளையும் விவரிக்கிறது.
*இந்த புராணத்தில் கிட்டத்தட்ட 500 பாடல்கள் வரை உள்ளதால் அன்பர்கள் படித்து புரிந்து கொள்ள வசதியாக அடுத்த சில நாட்களுக்கு தினமும் 50 பாடல்கள் வீதம் பகிர்ந்து கொள்கிறேன்.*🙏
*இன்றைய பதிவில் 401 முதல் 429 வரையிலான பாடல்கள்*
பாடல் வரிகள் :
பிரம புரத் திரு முனிவர்
பெரும் தொண்டை நல் நாட்டில்
அரன் உறையும் தானங்கள்
அணைந்து இறைஞ்சிப் பாடுதற்கு அங்கு
உரன் உடைய திரு நாவுக்கு
அரசர் உரை செய்து அருளப்
புரம் எரித்தார் திருமகனார்
பூந்துருத்தி தொழுது அகன்றார். 401
ஆண்ட அரசு அங்கணர் சீர்
அருள் பெற்றப் பதி நின்றும்
பாண்டி நாட்டு எழுந்து அருளும்
பான்மையராய்த் தென் திசை போய்க்
காண் தகைய திருப் புத்தூர்
பணிந்து ஏத்திக் கதிர் மதியம்
தீண்டு கொடி மதில் மதுரைத்
திரு ஆலவாய் சேர்ந்தார். 402
சென்று அணைந்து மதுரையினில்
திருந்திய நூல் சங்கத்துள்
அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து
அருளிய அங்கணர் கோயில்
முன்றிலினை வலம் கொண்டு
முன் இறைஞ்சி உள் புக்கு
வன் தனி மால் விடையாரை
வணங்கி மகிழ்வொடும் திளைத்தார். 403
எய்திய பேர் ஆனந்த
இன்பத்தின் இடை அழுந்தி
மொய் திகழும் சடையானை
முளைத்தானை என்று எடுத்துச்
செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ்
பாடிப் புறத்து அணைவார்
கை தொழுது பணிந்து ஏத்தித்
திரு உள்ளம் களி சிறந்தார். 404
சீர் திகழும் பாண்டிமா
தேவியார் திரு நீற்றின்
சார்வு அடைய கூன் நிமிர்ந்த
தென்னவனார் தம் உடனே
பார் பரவும் குலச் சிறையார்
வாகீசர் தமைப் பணி உற்று
ஆரகிலாக் காதல் மிக
அடி போற்ற அங்கு இருந்தார். 405
திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சுடரைச்
செழும் பொருள் நூல்
தருவானை நேர் இசையும்
தாண்டகமும் முதலான
பெரு வாய்மைத் தமிழ் பாடிப்
பேணு திருப்பணி செய்து
மருவார் தம் புரம் எரித்தார்
பூவணத்தை வந்து அடைந்தார். 406
கொடி மாடம் நிலவு திருப்
பூவணத்துக் கோயிலின் உள்
நெடியானுக்கு அறிவு அரியார் நேர்
தோன்ற கண்டு இறைஞ்சி
வடிவேலு திரிசூலத்
தாண்டகத்தால் வழுத்திப் போய்ப்
பொடி நீடு திருமேனிப்
புனிதர் பதி பிற பணிவார். 407
தென் இலங்கை இராவணன்
தன் சிரம் ஈரைந்தும் துணித்த
மன்னவன் ஆம் இராமனுக்கு வரும்
பெரும் பாதகம் தீர்த்த
பிஞ்ஞகரைத் தொழுவதற்கு நினைந்து
போய்ப் பெரு மகிழ்ச்சி
துன்னி மனம் கரைந்து உருகத்
தொழுது எழுந்தார் சொல் அரசர். 408
தேவர் தொழும் தனி
முதலைத் திரு இராமேச்சுரத்து
மேவிய சங்கரனை எதிர்
நின்று விருப்புறு மொழியால்
பாவு திரு நேர் இசைகள்
முதலான தமிழ் பாடி
நாவரசர் திருத் தொண்டு நலம்
பெருகச் செய்து அமர்ந்தார். 409
அங்குறைந்து கண் நுதலார் அடி
சூடி அகன்று போய்ப்
பொங்கு தமிழ்த் திரு நாட்டுப்
புறம் பணை சூழ் நெல் வேலி
செங்கண் விடையார் மன்னும்
திருக் கானப் பேர் முதலாம்
எங்கும் நிகழ் தானங்கள்
எல்லாம் புக்கு இறைஞ்சுவார். 410
தொழுது பல வகையாலும் சொல்
தொடை வண் தமிழ் பாடி
வழுவில் திருப்பணி செய்து மனம்
கசிவு உற்று எப் பொழுதும்
ஒழுகிய கண் பொழி புனலும்
ஓவாது சிவன் தாள்கள்
தழுவிய சிந்தையில் உணர்வும்
தங்கிய நீர்மையில் சரித்தார். 411
தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில்
எங்கும் சென்று இறைஞ்சிப்
பாம்பு அணிவார் தமைப் பணிவார்
பொன்னி நாடது அணைந்து
வாம் புனல் சூழ் வள நகர்கள்
பின்னும் போய் வணங்கியே
பூம் புகலூர் வந்து அடைந்தார்
பொய்ப் பாசம் போக்குவார். 412
பொய்கை சூழ் பூம் புகலூர்ப்
புனிதர் மலர்த் தாள் வணங்கி
நையும் மனப் பரிவினோடும்
நாள் தோறும் திரு முன்றில்
கை கலந்த திருத் தொண்டு
செய்து பெரும் காதல் உடன்
வைகு நாள் எண் இறந்த
வண் தமிழ் மாலைகள் மொழிவார். 413
நின்ற திருத் தாண்டகமும்
நீடு தனித் தாண்டகமும்
மன்று உறைவார் வாழ் பதிகள்
வழுத்து திருத் தாண்டகமும்
கொன்றை மலர்ச் சடையார் பால்
குறைந்த திரு நேர் இசையும்
துன்று தனி நேர் இசையும்
முதலான தொடுத்து அமைத்தார். 414
ஆருயிரின் திரு விருத்தம்
தச புராணத்து அடைவும்
பார் பரவும் பாவ
நாசப் பதிகம் பன்முறையும்
நேர் பட நின்று அறை
கூவும் திருப்பதிகம் முதல் பிறவும்
பேர் அருளின் கடல்
அளிக்கும் பெருமானைப் பாடினார். 415
அந் நிலைமையினில் ஆண்ட அரசு
பணி செய்ய அவர்
நல் நிலைமை காட்டுவார் நம்பர்
திரு மணி முன்றில்
தன்னில் வரும் உழவாரம் நுழைந்த
இடம் தான் எங்கும்
பொன்னினொடு நவமணிகள் பொலிந்து
இலங்க அருள் செய்தார். 416
செம்பொன்னும் நவமணியும் சேண்
விளங்க ஆங்கொவையும்
உம்பர் பிரான் திருமுன்றில் உருள்
பருக்கை உடன் ஒக்க
எம் பெருமான் வாகீசர்
உழ வாரத்தினில் ஏந்தி
வம்பலர் மென் பூங்கமல
வாவியினில் புக எறிந்தார். 417
புல்லோடும் கல்லோடும்
பொன்னோடும் மணியோடும்
சொல்லோடும் வேறு பாடு இலா
நிலைமை துணிந்து இருந்த
நல்லோர் முன் திருப் புகலூர்
நாயகனார் திரு அருளால்
வில்லோடு நுதல் மடவார்
விசும்பூடு வந்து இழிந்தார். 418
வானகம் மின்னுக் கொடிகள் வந்து
இழிந்தால் என வந்து
தான நிறை சுருதிகளில்
தகும் அலங்காரத் தன்மை
கான அமுதம் பரக்கும்
கனிவாயில் ஒளி பரப்பப்
பானல் நெடுங் கண்கள் வெளி
பரப்பி இசை பாடுவார். 419
கற்பகப் பூந்தளிர் அடி போம்
காமரு சாரிகை செய்ய
உற்பலம் மென் முகிழ் விரல்
வட்டு அணையோடும் கை பெயரப்
பொற்புறும் அக் கையின் வழிப்
பொரு கயல் கண் புடை பெயர
அற்புத பொன் கொடி
நுடங்கி ஆடுவபோல் ஆடுவார். 420
ஆடுவார் பாடுவார் அலர்
மாரி மேல் பொழிவார்
கூடுவார் போன்று அணைவார்
குழல் அவிழ இடை நுடங்க
ஓடுவார் மார வேளுடன்
மீள்வார் ஒளி பெருக
நீடுவார் துகில் அசைய
நிற்பாரும் ஆயினார். 421
இத் தன்மை அரம்பையர்கள்
எவ்விதமும் செயல் புரிய
அத்தனார் திருவடிக் கீழ் நினைவு
அகலா அன்பு உருகும்
மெய்த் தன்மை உணர்வு உடைய
விழுத் தவத்து மேலோர் தம்
சித்த நிலை திரியாது செய்
பணியின் தலை நின்றார். 422
இம் மாயப் பவத் தொடக்காம்
இருவினைகள் தமை நோக்கி
உம்மால் இங்கு என்ன குறை
உடையேன் யான் திருவாரூர்
அம்மானுக்கு ஆள் ஆனேன்
அலையேன் மின் நீர் என்று
பொய்ம் மாயப் பெருங் கடலுள்
எனும் திருத் தாண்டகம் புகன்றார். 423
மாதர் அவர் மருங்கு அணைய
வந்து எய்தி மதன வசக்
காதலர் புரிந்து ஒழுகும்
கை தவங்கள் செய்திடவும்
பேதம் இலா ஓர் உணர்வில்
பெரிய வரைப் பெயர்விக்க
யாதும் ஒரு செயல் இல்லாமையில்
இறைஞ்சி எதிர் அகன்றார். 424
இந் நிலைமை உலகு ஏழும்
எய்த அறிந்து இயல்பு ஏத்த
மன்னிய அன்பு உறு பத்தி
வடிவு ஆன வாகீசர்
மின் நிலவும் சடையார் தம் மெய்ப்
பொருள் தான் எய்த வரும்
அந்நிலைமை அணித்து ஆகச் சில
நாள் அங்கு அமர்ந்து இருந்தார். 425
மன்னிய அந்தக் கரணம்
மருவுதலைப் பாட்டினால்
தன்னுடைய சரண் ஆன
தமியேனைப் புகலூரன்
என்னை இனிச் சேவடிக்கீழ்
இருத்திடும் என்று எழுகின்ற
முன் உணர்வின் முயற்சியினால்
திருவிருத்தம் பல மொழிந்தார். 426
மண் முதலாம் உலகு ஏத்த
மன்னு திருத் தாண்டகத்தைப்
புண்ணியா உன் அடிக்கே
போதுகின்றேன் எனப் புகன்று
நண்ணரிய சிவ ஆனந்த
ஞான வடிவே ஆகி
அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட
அரசு அமர்ந்து இருந்தார். 427
வானவர்கள் மலர் மாரி மண்
நிறைய விண் உலகின்
மேல் நிறைந்த ஐந்து பேரிய
ஒலியும் விரிஞ்சன் முதல்
யோனிகள் ஆயின எல்லாம் உள்
நிறைந்த பெரு மகிழ்ச்சி
தான் நிறைந்த சித்திரையில்
சதயம் ஆம் திரு நாளில். 428
அடியனேன் ஆதரவால்
ஆண்ட அரசின் சரிதப்
படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன்
அப் பர முனிவன்
கடி மலர் மென் சேவடிகள் கை
தொழுது குலச் சிறையார்
முடிவில் புகழ்த் திருத் தொண்டின்
முயற்சியினை மொழிகின்றேன். 429
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏