News Kadai
471 views • 1 days ago
அது எப்படி திமிங்கலம்..?
ஜோஸ் அலுக்காஸ் CEO, சி.எம். விஜயை சந்தித்தது ஞாபகத்தில் இருக்கலாம். இந்த சந்திப்பு நடந்த சில நாட்களிலேயே “தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அப்போதே இந்த விவகாரம் அரசல் புரசலாக சோசியல் மீடியாவில் விவாதத்தை கிளப்பியது. இப்போது ஒரு பைசாவுக்கு ஜோஸ் அலுக்காஸ் குடும்பத்தைச் சேர்ந்த நிறுவனமே டெண்டரைக் கைப்பற்றியுள்ளது அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஜி.ஆர்.டி. உம்மிடி பங்காரு, டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்கள் குறைந்தபட்சமே ரூ.400 கோரியிருந்த நிலையில், ஜோயாலுக்காஸ் மட்டும் எப்படி இவ்வளவு குறைவான தொகையை டெண்டராக கோர முடியும்?. ஜி.எஸ்.டி. கூட வசூலிக்காமல் இருக்க முடியும்? என பல்வேறு கேள்விகளை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.
#TVKVijay #TVKGovt #JosAlukkas #Joyalukas #goldring #📺வைரல் தகவல்🤩
18 shares