🌿 இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள். 13.08.2026 (வியாழன்) ஒளி நிறை மறையுண்மைகள். முதலாவது. ஆண்டவர் இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து, இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில் "உம் ஊழியன் மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும்." என வாசிக்கப்பட்டதை கண்டோம். இறை ஊழியம் புரியும் ஒவ்வொரு அருட்பணியாளர்களுக்காகவும் இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம். இரண்டாவது. ஆண்டவர் இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து, இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில் "உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்."" என நமதாண்டவர் இயேசு கிறிஸ்து கூறுகிறார். நாம் நமக்கு எதிராக பாவம் செய்தவர்களை முழு உள்ளத்தோடு மன்னிக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். மூன்றாவது. ஆண்டவர் இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து, மரியாளின் மாசற்ற திரு இருதயத்திற்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட இந்த ஆகஸ்டு மாதத்தில் நாம் நமது செபமாலை மணிகளால் மரியாளின் மாசற்ற இருதயத்திற்கு ஆறுதல் தரவேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். நான்காவது. ஆண்டவர் இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து, பெர்னதெத்துக்கு 18 முறை தரிசனமளித்த தூய லூர்து அன்னை, திருக்காட்சிகளில் செபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறைபொருள்களில் 15 மறையுண்மைகளை நாளுக்கு ஒன்றாக தியானித்து செபிக்க வலியுறுத்தினார். குடும்ப செபமாலை செபிக்கும் பழக்கத்தை இல்லங்களில் தொய்வில்லாமல் கடைபிடிக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். ஐந்தாவது. ஆண்டவர் இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து, குழந்தை இயேசுவுக்கும், புனித யூதா ததேயுவிற்கும் ஒப்புக் கொடுக்கப்பட்ட வியாழக்கிழமையான இன்று நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். ஆமென். #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்

More like this