Murugan
1K views 2 days ago
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி, காட்டாங்குளத்தூர், கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகர் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் எஸ்.ஆர்.எம் (SRM) உள்ளிட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கம் இருப்பதாக வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில், காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மாணவர்களின் அறைகள், சந்தேகத்திற்குரிய பகுதிகள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றைத் தனிப்படை உதவியுடன் தீவிரமாக ஆய்வு செய்த அதிகாரிகள், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களைக் கண்டறியவும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தக் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺 #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰
18 likes
14 shares

More like this