S.ANTHONY✝️YESUMARY
*🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹*
*அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!*
*கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக்கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு.*
*உனது எழிலில் நாட்டங்கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு!*
*தீர் நகர மக்கள் பரிசில் பல ஏந்தி நிற்பர்; செல்வமிகு சீமான்கள் உன்னருள் வேண்டி நிற்பர்.*
*அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள்.*
*பலவண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்; கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள்.*
(திருப்பாடல்கள் 45:9-14)
*✝️ஜெபிப்போமாக :🛐*
விண்ணக தந்தையே இறைவா! இதோ இந்த காலை பொழுதில், உம்மை காணவும், உம்மோடு பேசவும் உம்மை துதிக்கவும் வந்திருக்கும் என்னை, ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.
இன்று என்னை, புது விடியலை காண செய்தமைக்காய் உமக்கு நன்றி கூறுகிறேன் அப்பா. இந்த நாளில் நான் செய்ய போகும் அனைத்து காரியங்களிலும், உம்மை பிரதிபலிக்கும் பாக்கியத்தை எனக்கு தாரும்.
அப்பா! உமது தாயை நீர் உடலோடு விண்ணிற்கு எடுத்து சென்றதை நினைவு கூர்ந்து விழா எடுக்கும் எங்களை, சிறப்பாக ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். அந்த தாயை நீர் மாசில்லாமல் பாதுகாத்தது போல, உமது பிள்ளைகளாகிய எங்களையும், தூய்மையின் வழியில் நடத்தி காத்தருளும்.
எங்களின் வலுவின்மையினால், எங்கள் வாழ்நாள்களில், ஒருநாளும் உமக்கு துரோகம் செய்யாதபடிக்கு எங்களை சாத்தானிடமிருந்து காத்தருளும். இதுவரை உம்மை மறக்கடிக்க செய்த, உமக்கு நிந்தை அவமானம் ஏற்பட துணை சென்ற, உமக்கு எதிராய் செயல்பட்ட அனைத்து செயல்களுக்கும் மன்னிப்பு கேட்கிறோம் அப்பா, எங்களை மன்னியும்.
ஆண்டவரே! எம் நாட்டிற்காக தன்னுயிரை தந்த தியாகிகளை, இந்த நேரத்தில் நினைவு கூறுகின்றோம். இங்கிலாந்து நாட்டவரிடம் அடிமையாக இருந்தபோது பட்ட இன்னல்கள், இப்போது இருப்பதை போல பல மடங்கு குறைவே. இப்போது இந்த சுதந்திர நாட்டில், நாங்கள் சுதந்திரம் இல்லாமல் வாழும் நிலையை நீர் கண்ணோக்கி பாரும்.
சிறுபான்மையினராக வாழ்கிறோம், பிறரால் துன்பப்படுகிறோம், ஒடுக்கப்படுகிறோம், அடிக்கப்படுகிறோம், துரத்தப்படுகிறோம், எங்களை பாரும் அப்பா, இந்த நிலையை மாற்றும். எங்களின் கண்ணீர் வேண்டுதலை கண்ணோக்கும், பதிலளித்தருளும், அனைத்தையும் சரியாக்கும்.
அம்மா மரியே, விண்ணக அரசியே! நீர் வாழ்க, உமது தூய்மையையும், தாய்மையையும், போற்றி வாழ்த்துகிறோம். விண்ணிலிருந்து எங்களுக்கு துணை தாரும், விண்ணக ஒளியை எங்களிடம் பிரகாசிக்க செய்யும், வானிலிருந்து இறங்கி வாரும், எங்களோடு தங்கும், எங்களை மற்றும் எங்கள் குறைகளை நிவர்த்தி செய்யும், எங்களை தூய்மையாக பாதுகாத்து வழிநடத்தும்.
உமது மகனிடம் எங்களுக்காக பரிந்து பேசும், எங்களை விண்ணகம் கொண்டு சேர்க்க அவரிடம் பரிந்துரை செய்யும். என்றும் உமது மகனின் வழிடக்க எங்களுக்கு கற்று தாரும்.
*ஆமென்.🌹*
*🙏🏻🇮🇳உங்கள் அனைவருக்கும் விண்ணேற்பு அன்னை பெருவிழா👑 மற்றும் சுதந்திர தின வாழ்த்துக்கள்🇮🇳🙏🏻* #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு