திருநீற்றுச் சுவடு
#🙏விநாயக போற்றி #விநாயகர் #🕉️கணபதி போற்றி #🙏🪔 ஓம் கணபதி போற்றி 🪔🙏 துதி
🚩அகர முதலாய் அமர்ந்த பெருமானே
இகபர சுகங்கள் ஈந்திடும் கோமானே
சகல வினைகளும் சாய்ப்பாய் கணநாதா
மகபதி போற்றும் மங்கள நாயகனே.
🌹பதவுரை:
🔹அகர முதலாய் அமர்ந்த பெருமானே = எழுத்துக்களுக்கெல்லாம் முதல் எழுத்தாக 'அ' விளங்குவது போல, அனைத்து உலக உயிர்களுக்கும் முதன்மையாக விளங்கி வீற்றிருக்கும் இறைவனே.
🔹இகபர சுகங்கள் ஈந்திடும் கோமானே = இம்மை வாழ்வின் நன்மைகளையும், மறுமை வாழ்வின் நற்கதியையும் குறைவின்றி வழங்குகின்ற தலைவனே (அரசனே).
🔹சகல வினைகளும் சாய்ப்பாய் கணநாதா = சிவகணங்களின் தலைவரான விநாயகப் பெருமானே, எங்களைச் சூழ்ந்துள்ள நல்வினை, தீவினை ஆகிய அனைத்து வினைகளையும், அதன் பயன் களையும் அழித்து அருள்புரிவாயாக.
🔹மகபதி போற்றும் மங்கள நாயகனே = யாகங்களின் தலைவனான தேவேந்திர ன் கூட பணிந்து வணங்கிப் போற்றுகி ன்ற, அனைத்து மங்களங்களையும் அருளும் முழுமுதற் கடவுளே.
🌹விளக்கம்:
🔸எழுத்துக்களுக்கெல்லாம் தொடக்கமாக 'அகரம்' அமைந்திருப்பது போல, இந்த அகிலத்திற்கே ஆதிமூலமாய் வீற்றிருக்கும் முழுமுதற் கடவுளே,
🔸நாங்கள் வாழும் இந்த உலக வாழ்விற்கான சகல செல்வங்களையும், மறைவிற்குப் பின் ஆன்மா அடையும் முக்தி என்னும் பேரின்பத்தையும் தருபவர் நீரே.
🔸சிவகணங்களின் தலைவரான கணபதியே, எங்களின் அறியாமையால் சேர்ந்த அனைத்துப் பாவ வினைகளை யும், தடைகளையும் அடியோடு நீக்கி அருள்வீராக.
🔸தேவர்களின் அரசனான இந்திரன் முதற்கொண்டு அனைத்துத் தேவர்களும் போற்றிப் புகழும் மங்களங்களின் திருவுருவே, உமது திருவடிகளைச் சரணடைகிறோம்.
🌹கருத்து:
🚩விநாயகப் பெருமானே அனைத்துத் தொடக்கங்களின் மூலமாகவும், முடிவின் முக்தியாகவும் விளங்குகிறார்.
🚩அவரைச் சரணடையும் ஒருவருக்கு உலகியல் சார்ந்த இன்பங்கள் மட்டுமின்றி, ஆன்மீகப் பேரின்பமும் கிட்டும்,
🚩முன்செய்த வினைகளால் ஏற்படும் தடைகள் அனைத்தும் நீங்கி, வாழ்வில் சகல மங்களங்களும் நிறையும் என்பதே இப்பாடலின் மையக்கருத்தாகும்.
🌹விநாயகா போற்றி... விக்னேஸ்வரா போற்றி...
ஓம் அருள்மிகு ஶ்ரீ மணக்குள விநாயக போற்றி ஓம் போற்றி ...🌺 #🙏 கணபதி போற்றி