More like this
- MUTHUPANDIAN RAMKUMAR#புதன் கிழமை பக்தி ஸ்பெஷல் பிரத்யங்கிரா தேவி மிகவும் விசேஷமானவள். சிங்கமுகத்துடன் கடும் உக்கிரமாகவும்,ஆயுதங்களுடனும் தரிசனம் தருகின்றாள் பிரகலாதனின் துன்பத்தைப் போக்குவதற்காக மகாவிஷ்ணு மிகவும் உக்கிரமாக உக்கிரமூர்த்தியாக நரசிம்மராக வெளிப்பட்டு இரணியனை வதம் செய்கின்றார்.அதன் பின்னரும் அவரது உக்கிரம் குறையாமல் அந்த கோபத்தில் இருந்து வெளிவர முடியாமல் இருக்கிறார். அப்போது தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிடுகிறார்கள்.சிவபெருமான் பாதி சிங்கமாகவும் பாதி பறவையாகவும் இணைந்த சரபேஸ்வரராக மாறுகிறார். சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணிலிருந்து அம்பிகை பிரத்தியங்கிராதேவியாக ஆயிரம் சிங்க முகங்கள்,இரண்டாயிரம் கைகளுடன் வெளிப்பட்டாள். பிரத்தியங்கிராதேவியும்,அம்பிகை சூலினியும் சரபேஸ்வரரின் இரண்டு இறக்கைகளில் ஐக்கியமாகிக் கொள்கிறார்கள்.பின்னர் சரபேஸ்வரர் நரசிம்மரின் கோபத்தைத் தணிக்கும் பொருட்டு நரசிம்மரை தனது இறக்கைகளால் அன்புடன் அரவணைத்து கொள்கிறார்.அச்சமயம் நரசிம்மரின் கோபம் தணிகிறது கும்பகோணம் திருநாகேஸ்வரம் அருகில் உள்ள அய்யாவாடி அருகில், பிரத்தியங்கிராதேவிக்கு என தனிக்கோயிலே உள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள மொரட்டாண்டிஎன்னும் ஊரில் உள்ள பிரத்யங்கிரா தேவி கோவில் பிரத்யங்கிரா தேவிக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு.அபராஜிதா என்றால் 'யாராலும் வெல்ல முடியாதவள் என்று பொருள்.. பிரத்யங்கிராதேவி யந்திர மந்திர தந்திரங்களுக்கு அதிபதியான அதர்வண பத்ரகாளி ஆவாள் இவளது மந்திரத்தை“அங்கிரஸ்” “பிரத்யங்கிரஸ்” என்ற இரு ரிஷிகள் சேர்ந்து உருவாக்கியதால் அவர்களது பெயராலேயே ”பிரத்யங்கிரா” என அழைக்கப்படுகிறாள்.இவள் அனுமாரை காவலாகக் கொள்பவள் ராவணனின் மகன் இந்திரஜித்,ராமரையும்,லக்ஷ்மணனையும் தன் படை பலத்தால் போரிட்டு வெற்றி பெற முடியாது என்பதை அறிந்தான் எனவே பிரத்யங்கிராதேவிக்கு உகந்த நிகும்பலா வேள்வியை தேய்பிறை அஷ்டமி தினத்தின் நடுநிசியில் மிக ரகசியமாக நடத்துகிறான். .இந்திரஜித் இந்த யாகத்தை பூர்த்தி செய்து விட்டால் அவனை வெல்ல யாராலும் முடியாது என விபீஷணனின் உதவியால் அறிந்த .லக்ஷ்மணன் முதலில் யாகத்தையும் பின் இந்திரஜித்தையும் அழித்தார். இந்த யாகம் செய்த இடமாக கருதப்படும் புதுச்சேரி மாவட்டத்தில் மொரட்டாண்டி என்னும் ஊரில் பிரத்யங்கிரா தேவிக்கு 72 அடி உயர மிக பிரம்மாண்டமான உருவத்துடன் கூடிய கோவில் அமைந்துள்ளது. .1318
- Karur Mahesh...#கரூர் மகேஸ்வரன் #காலை வணக்கம் #🙏 புதன் பக்தி ஸ்பெஷல் #புதன் கிழமை பக்தி ஸ்பெஷல் #💐புதன் பக்தி ஸ்பெஷல்👋3717
- MUTHUPANDIAN RAMKUMAR#புதன் கிழமை பக்தி ஸ்பெஷல்811
- MUTHUPANDIAN RAMKUMAR#புதன் கிழமை பக்தி ஸ்பெஷல்1510
- MUTHUPANDIAN RAMKUMAR#புதன் கிழமை பக்தி ஸ்பெஷல்1611
- MUTHUPANDIAN RAMKUMAR#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #திங்ககிழமை செவ்வாய் கிழமை புதன் கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ... #புதன் கிழமை பக்தி ஸ்பெஷல் 💐*02🙏09🙏2026💐* 💐*புதன்கிழமை💐* 🙏*இனியகாலைவணக்கம்🙏* *வாழ்க வளமுடன் ! நலமுடன் ! மகிழ்வுடன் ! வாழ்த்துகள் .* 💐02 - 09 - 2026💐 💐புதன்கிழமை💐 💐பராபவ ஆண்டு💐 💐ஆவணி மாதம்💐 💐16 - ம் நாள்💐 💐இன்றைய நல்ல நேரம்💐 காலை : 09.15 மணி முதல் 10.15 மணி வரை. பகல் : 10.45 மணி முதல் 11.45 மணி வரை. மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை . இரவு : 06.30 மணி முதல் 07.30 மணி வரை. 💐இன்றைய நட்சத்திரம்💐 பரணிஇன்று பின்னிரவு 02.20 மணி வரை) பின்னர் கார்த்திகை (இன்று பின்னிரவு 02.20 மணி முதல் நாளை நள்ளிரவு 12.56 மணி வரை) பிறகு ரோகிணி . 💐தேய்பிறை திதி💐 பஞ்சமி(இன்று காலை 06.11 மணி வரை) பின்னர் ஷஷ்டி(இன்று காலை 06.11 மணி முதல் நாளை அதிகாலை 04.12 மணி வரை) பின்பு சப்தமி . 💐சந்திராஷ்டமம்💐 சித்திரை . 💐யோகம்💐 சித்தயோகம்(இன்று பின்னிரவு 02.20 மணி வரை) பின்பு அமிர்தயோகம் (இன்று பின்னிரவு 02.20 மணி முதல் நாளை காலை 06.03 மணி வரை)பின்னர் மரணயோகம் . 💐சூலம்💐 வடக்கு (பரிகாரம் : பால்) 💐கரணம்💐 தைதுலம் (இன்று காலை 06.11 மணி வரை ) பின்பு கரசை (இன்று மாலை 05.11 மணி வரை) பின்னர் வணிசை (நாளை அதிகாலை 04.15 மணி வரை) பிறகு பத்திரை (நாளை பிற்பகல் 03.10 மணி வரை ) பிறகு பவம் நாளை பின்னிரவு 02.08 மணி வரை ) பிறகு பாலவம். 💐சூரிய உதயம்💐 காலை : 06.04 மணி 💐ராகுகாலம்💐 நண்பகல் : 12.00 மணி முதல் 01.30 மணி வரை . 💐எமகண்டம்💐 காலை : 07.30 மணி முதல் 09.00 மணி வரை . 💐குளிகை💐 பகல் : 10.30 மணி முதல் 12.00 மணி வரை . 💐💐💐💐💐💐💐💐 💐GOOD MORNING💐 💐SEPTEMBER💐 💐02-09-2026 WEDNESDAY 💐 💐HAVE A NICE DAY💐 💐GOD BLESS ALL💐JK 💐💐💐💐💐💐💐💐1111
- MUTHUPANDIAN RAMKUMAR#புதன் கிழமை பக்தி ஸ்பெஷல் #விருந்தாவனசித்தம் விருந்தாவன சித்தம் (Vrindavan Consciousness) என்றால் என்ன? 🌿🦚 விருந்தாவன சித்தம் என்பது ஸ்ரீகிருஷ்ணரை மையமாகக் கொண்ட தூய, நிபந்தனையற்ற அன்பும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தன்னலமற்ற சேவையும் நிறைந்த ஆன்மீக நிலை ஆகும். இது ஒரு குறிப்பிட்ட புவியியல் இடத்தில் வாழ்வதைக் குறிக்கவில்லை. உண்மையான விருந்தாவனம் என்பது இதயத்தில் மலரும் பக்தி உணர்வு. ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவருடைய மனமும் வாழ்வும் முழுமையாக கிருஷ்ணருக்கே அர்ப்பணிக்கப்பட்டிருந்தால், அவர் விருந்தாவன சித்தத்தில் வாழ்கிறார். --- 🌸 விருந்தாவன சித்தத்தின் முக்கிய அம்சங்கள் ❤️ 1. தூய பக்தி (Pure Devotion) கிருஷ்ணரை வெறும் ஆசைகளை நிறைவேற்றும் தெய்வமாக அல்லாமல், குழந்தை, நண்பன், காதலன் அல்லது உயிரின் ஆதாரமாக நேசிப்பதே உண்மையான பக்தி. --- 🙏 2. தன்னலமற்ற சேவை (Selfless Service) "இதற்கு என்ன கிடைக்கும்?" என்ற எண்ணமின்றி, எண்ணம், சொல், செயல் அனைத்தையும் கிருஷ்ணரின் திருப்திக்காக அர்ப்பணிப்பது விருந்தாவன வாழ்வின் அடிப்படை. --- 🌿 3. இதயத்தில் விருந்தாவனம் (Vrindavan Within) விருந்தாவனம் என்பது உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு புனித நகரம் மட்டுமல்ல. கிருஷ்ணரை இடைவிடாமல் நினைத்து, அவரின் திருநாமத்தை ஜபித்து, அவருக்காக வாழும் இதயமே உண்மையான விருந்தாவனம். --- 🌼 விருந்தாவன சித்தத்தை எப்படி வளர்த்துக் கொள்வது? 🕉️ 1. திருநாம ஜபம் தாழ்மையுடனும் அன்புடனும் கிருஷ்ணரின் திருநாமங்களை தினமும் ஜபிக்க வேண்டும். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே --- 📖 2. கிருஷ்ணரின் லீலைகளை நினைவு கூறுதல் ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை மற்றும் வைஷ்ணவ ஆசாரியர்களின் நூல்களை வாசித்து, கிருஷ்ணரின் திவ்ய லீலைகளை மனதில் தியானிக்க வேண்டும். --- 🤲 3. பக்தர்களுக்குச் சேவை செய்தல் கிருஷ்ணருக்குச் செய்யும் சேவையைப் போலவே, அவரது பக்தர்களுக்குச் செய்யும் அன்பான சேவையும் விருந்தாவன சித்தத்தை வளர்க்கும். --- 🌺 நிறைவுரை விருந்தாவனம் என்பது ஒரு இடமல்ல. அது அன்பு, பக்தி, தாழ்மை, நினைவு, சேவை ஆகியவை ஒன்றிணைந்து மலரும் ஆன்மீக மனநிலை. எப்போது நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சிந்தனையும், வார்த்தையும், செயல்களும் ஸ்ரீகிருஷ்ணரின் திருப்திக்காக அர்ப்பணிக்கப்படுகின்றனவோ, அப்போதே நம் இதயம் உண்மையான விருந்தாவனமாக மலர்கிறது. "கிருஷ்ணர் நம் வாழ்வின் மையமாக மாறும் போது, நாம் எங்கு இருந்தாலும் அங்கேயே விருந்தாவனம்." 🌿💙1218
- MUTHUPANDIAN RAMKUMAR#புதன் கிழமை பக்தி ஸ்பெஷல் துதி 🚩அருகம்புல் சாத்தினால் அகமகிழும் நாயகனே உருகும் அடியாரின் உள்ளத்து நாயகனே பெருகுந் துயர்நீக்கும் பேரருள் வள்ளலே கருகும் வினைகளைத் தீர்க்கும் கணபதியே. 🌹பதவுரை: 🔹அருகம்புல் சாத்தினால் அகமகிழும் நாயகனே = எளிமையான அருகம்புல்லை பக்தியோடு அர்ப்பணித்து வழிபட்டாலே மனம் குளிர்ந்து பேரானந்தம் அடைகின்ற தலைவனே, 🔹உருகும் அடியாரின் உள்ளத்து நாயகனே = மெய்யன்பால் உன்னை நினைந்து உள்ளம் உருகி வணங்கும் பக்தர்களின் இதயக் கோவிலில் குடிகொண்டு ஆட்சிபுரியும் இறைவனே, 🔹பெருகுந் துயர்நீக்கும் பேரருள் வள்ளலே = மனித வாழ்வில் வெள்ளமெனப் பெருகி வரும் துன்பங்களையும் துயரங்களையும் முற்றிலும் வேரறுத்து, அளப்பரிய கருணையை வாரி வழங்கும் கொடை வள்ளலே, 🔹கருகும் வினைகளைத் தீர்க்கும் கணபதியே = பிறவிதோறும் தொடர்ந்து வந்து வாட்டும் கர்ம வினைகளை நெருப்பிலிட்ட தூசு போலக் கருகி அழியச் செய்து அருள்புரியும் கணநாதனே. 🌹விளக்கம்: 🔸விநாயகப் பெருமான் ஆடம்பரமான வழிபாடுகளை விடத் தூய அன்பையே பெரிதும் விரும்புபவர். 🔸எளிதில் கிடைக்கும் அருகம்புல்லைச் சாத்தி வழிபட்டாலே அவர் மனம் மகிழ்ந் து தன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். 🔸கள்ளமில்லா மனதோடு, தன்னை முழுமையாகச் சரணடைந்து உருகும் அடியார்களின் உள்ளத்தில் அவர் எப்போதும் நீங்காது வீற்றிருக்கிறார். 🔸வாழ்வில் அடுத்தடுத்துப் பெருகி வரும் சோதனைகள், கவலைகள் மற்றும் துன்பங்கள் அனைத்தையும் தனது எல்லையற்ற பேரருளால் நீக்கும் வள்ளலாக அவர் திகழ்கிறார். 🔸முற்பிறவி மற்றும் இப்பிறவிச் செயல்க ளால் விளைந்த கொடிய வினைகள் அனைத்தையும் அடியோடு பொசுக்கி, நல்வாழ்வை அருளும் முழுமுதற் கடவுள் கணபதியே ஆவார். 🌹கருத்து: 🚩ஆடம்பரமற்ற எளிய பக்தியால் கணபதியை எளிதில் மகிழ்விக்க முடியும்; 🚩உண்மையான அன்போடு அவரை உள்ளத்தில் இருத்தி வணங்கினால், அவர் வாழ்வின் பெருந்துன்பங்களையும் கொடிய வினைகளையும் சுட்டெரித்து நற்கதியை வழங்குவார். 🌹விநாயகா போற்றி... விக்னேஸ்வரா போற்றி...1815
- MUTHUPANDIAN RAMKUMAR#புதன் கிழமை பக்தி ஸ்பெஷல் *விநாயகர்_சிவன் மகனாக தோன்றிய கதை தெரியுமா?...* 🔥🙏🏻🐘# *கணபதியை மனதால் தியானித்து* முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நடக்கும் நாம் அவரைத் தேடிப் போக வேண்டியது இல்லை. அவரே, நம்மை நாடி வந்து அருளும் பொருட்டு, நாம் இருக்கும், புழங்கும் இடங்களுக்கு அருகிலேயே... தெருக்கோடியிலும், மரத்தின் அடியிலும், நதிகளின் கரைகளிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார். 🔥🐘# *விநாயகர் விரதத்தை பார்வதி* தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான். இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள். அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள். 🔥🙏🏻#சிறு *_வயதிலிருந்தே* கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார். அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள். அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள். 🙏🏻 🔥🙏🏻# *ஆவணி மாத* அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள். அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள். 🐘🔥# *விநாயகர்_ஆதி பரம்பொருள்.* எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார். அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை. 🙏🏻146
- MUTHUPANDIAN RAMKUMAR#புதன் கிழமை பக்தி ஸ்பெஷல் ''# *சிவபெருமானாக காட்சிகொடுத்த மஹாவிஷ்ணு''.* 🙏🏽 🔥👣🌀# *திருவஹீந்திரபுரம் ஹேமாம்புஜவல்லி* தாயார் சமேத தேவநாதப் பெருமாள் ஹயக்கிரீவர் திருக்கோயில்''.பிரமாண்ட புராணம், கந்தபுராணம்,பரஹன் நாரதீயபுராணம் முதலான புராணங்களில் குறிப்பிடப்படும் தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ‘திருவஹீந்திரபுரம்’ என்பதாகும். கடலூரில் இருந்து மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் கொடில நதியின் கரையோரத்தில் அமைந்துள்ளது,இந்த திருத்தலம். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றது. #இத்தலத்தில் தேவநாதப் பெருமாள் அருளும் ஆலயம் ஒன்றும்,அதன் எதிரே மலை மீது ஹயக்ரீவர் ஆலயம் ஒன்றுமாக இரண்டுகோயில்கள் உள்ளது. தேவநாதப் பெருமாளாய், ஹேமாம்புஜவல்லி தாயார் சமேதராக கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் இறைவன் அருள்பாலிக்கிறார்.பக்தர்கள் இத்தல இறைவனை, திருப்பதி ஏழுமலையானாக நினைத்து திருப்பதிக்குச் செலுத்தும் வேண்டுதலை இங்கேயே செலுத்துகின்றனர். 🙏🏼 🌀# *சிலருக்கு_எவ்வளவு முயற்சித்தாலும்* திருப்பதி பாலாஜியை தரிசிக்கும் பேறு எளிதில் வாய்க்காது. அப்படிப்பட்டவர்கள் இங்கு வந்து தேவநாதரை வழிபட்டால், திருப்பதி பெருமாளை வழிபடும் பாக்கியம் உடனடியாக கிட்டும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.பரந்தாமன் பள்ளி கொண்டிருக்கும் ஆதிசேஷன் நிர்மாணித்த தலம் இது என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன. 🐚🌀# *இந்த_தலத்தில் உள்ள பெருமாளுக்கு* ஆதிசேஷன் பாதாள கங்கையையும், கருடன் விரஜா தீர்த்தத்தையும் கொண்டு வந்து தாகம் தீர்த்ததாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் பாதாள கங்கை சேஷ தீர்த்தம் என்றும், விரஜா தீர்த்தம் கெடில நதி என்றும் பெயர் பெற்று விளங்குகிறது.சேஷ தீர்த்தம் பெருமாளின் திருமஞ்சனத்திற்கும்,கெடில தீர்த்தம் பெருமாளின் நிவேதனம் தயாரிக்க மடப்பள்ளியிலும் பயன்படுத்தப்படுகிறது.இந்த ஆலயத்தில் வழிபட்டால் நாக தோஷம் அகலும். நாக தோஷம் தீர, பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு இங்குள்ள கிணற்றில் பால் தெளிக்கலாம்.இதுவே ஆதிசேஷனின் சேஷ தீர்த்தமாகும். இது ஆலயத்தின் வெளிச் சுவரின் வடக்கே உள்ளது.இரண்டாம் சுற்றுப் பிரகாரத்தின் தென்மேற்கில் ஹேமாம்புஜவல்லி தாயார் அருள்பாலிக்கிறார்.வடமேற்கில் சயனப் பெருமாள் மற்றும் இராமபிரானுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. தேவநாதப் பெருமாள் சன்னிதி திருச்சுற்றில் விநாயகர் அருள்புரிகிறார். #வில்வ_மரமே தல விருட்சமாக இருக்கிறது.இத்தல மூலவரின் எதிரில் கருடாழ்வார் கைகளைக் கட்டிக் கொண்டும், இராமர் சன்னிதியில் ஆஞ்சநேயர் வாயைப் பொத்தியபடியும் நிற்பது வேறு எங்கும் காணப்படாத அம்சமாக உள்ளது. மேலும் இராஜகோபாலன் சன்னிதி,ஆண்டாள் மற்றும் ஆழ்வார்கள் சன்னிதியும் இருக்கிறது.இதற்கெல்லாம் மணிமகுடமாக தேசிகனால் வழிபடப்பட்ட யோக ஹயக்ரீவர், தேவநாதப் பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கிறார். 🌀# *தேவநாதப் பெருமாளை ‘தாழக்* கோவிலில்’ வழிபட்டு விட்டு, கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால், சிறிய செந்நிற மலை காணப்படும். ‘அவ்ஷதகிரி’ என்று அழைக்கப்படும் இந்த மலை மீது 74 படிகள் உள்ளன.இந்த மலை மீதுள்ள அச்வத்த மரத்தின் கீழ் அமர்ந்து தான்,ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன், கருட மந்திரத்தை ஜெபித்தார். அப்போது கருடாழ்வார் தேசிகனுக்கு ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தார்.ஆயக் கலைகள் 64–ஐயும் நமக்கு அருளும் சரஸ்வதியின் குரு ஹயக்ரீவர். நான்கு வேதங்களையும் பிரம்மாவிடம் இருந்து மது, கைடபர் என்ற அரக்கர்கள் கைப்பற்றிச் சென்றனர். பெருமாள், ஹயக்ரீவ அவதாரம் எடுத்து அந்த அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டு, பிரம்ம தேவரிடம் ஒப்படைத்தார். 🐎# *ஹயக்ரீவர் கல்வி, ஞானம்* ஆகியவற்றிற்கு ஆதாரமாக உள்ளவர். லலிதா சகஸ்ர நாமத்தை அகத்தியருக்கு அருளிச் செய்தவர்.கருடனால் தனக்கு உபதேசிக்கப்பட்ட ஹயக்ரீவ மந்திரத்தை உபாசித்து, ஹயக்ரீவரின் அருள் காட்சியை கண்டார் தேசிகன்.திருக்காட்சி தந்த ஹயக்ரீவர், தேசிகனுக்கு சகல கலைகளும் கைவரச்செய்தார். ஹயக்ரீவரின் பூரண அருளைப் பெற்ற தேசிகன் தமிழிலும்,வடமொழியிலும் பல வேதாந்த நூல்களைப் படைத்துள்ளார்.திருவஹீந்திரபுரத்தில் தேசிகன் நிர்மாணித்த திருமாளிகையும், அவர் தோண்டி தீர்த்தம் எடுத்த கிணறும் உள்ளது. தேசிகன் தவம் புரிந்து ஹயக்ரீவரின் அருள்பெற்ற மலையில் ஹயக்ரீவர், லட்சுமி ஹயக்ரீவராய் அருள்பாலிக்கிறார்.அருகில் வேணுகோபாலன், நரசிம்மர் உள்ளனர். கருடாழ்வாரும் அருள்புரிகிறார்.ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சூட்டி, வெல்லம் கலந்த சுண்டலை நைவேத்தியம் செய்து வழிபட்டால் கல்வியில் முன்னேற்றம் அடையலாம். மேலும் ஞானம், வித்தைகளில் மேன்மையும் கிட்டும்.இத்தலத்தில் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.கட்டுரையாக்கம்:அன் பன்.சுந்தரர் அடிமை.சிவ.அ.விஜய் பெரியசுவாமி,கல்பாக்கம், நாம் தினந் தோறும் தேசிகன் இயற்றிய ‘ஹயக்ரீவ ஸ்தோத்திரம்’ படித்து வந்தால், கல்வியில் உயர் நிலையையும்,ஞானத்தையும், செல்வத்தையும் பெறலாம்.இந்த தலத்தில் லட்சுமி நரசிம்மர் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். 🙏🏼# *இவரை_ஞாயிறு, செவ்வாய்க்* கிழமைகளில் மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளும், சுவாதி நட்சத்திரத்தில் மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, பானகம் நைவேத்தியம் செய்தால் வறுமை, கடன் தொல்லை அகலும்.செவ்வாய் தோஷமும் விலகும்.இவ்வாலயத்தில் தேசிகனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. விசேஷ நாட்களில் ரத்ன அங்கி அலங்காரத்தில் தேசிகனைத் தரிசிக்கலாம். இத்தல தாயார் பிருகு மகரிஷிக்காக குழந்தையாக தாமரை மலரின் நடுவில் அவதரித்து, இங்குள்ள பெருமாளை வேண்டி தவம் இருந்து தேவநாதப் பெருமாளையே கரம்பிடித்தார். #வெள்ளிக்கிழமைகளில் ஹேமாம்புஜவல்லி தாயாருக்கு, மாலை வேளையில் வில்வ அர்ச்சனை செய்து வழிபட்டால் பெண்களுக்கு மனம் போல் மாங்கல்யம் அமையும். வறுமை நீங்கி செல்வம் செழிக்கும்.திருவஹீந்திரபுரம் பகுதியை ஆட்சி செய்து வந்த சோழ மன்னர் மிகச் சிறந்த சிவ பக்தன் ஆவான். ஒரு முறை மன்னன் திருவஹீந்திரபுரம் வந்தான். ஆனால் தான் ஒரு சிவ பக்தன் என்பதால், பெருமாளை சேவிக்காமல் செல்ல எண்ணினான். அப்போது தேவநாதப் பெருமாள், அந்தச் சோழ மன்னனுக்கு சிவபெருமானாக காட்சிக் கொடுத்தார்.இன்றும் தேவநாதப் பெருமாளின் கோவில் விமானத்தில் கிழக்கே மகாவிஷ்ணு அருள் செய்ய, மேற்கில் நரசிம்மர், வடக்கில் பிரம்மா, தெற்கில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கின்றனர். பிரம்மா – சிவன்– விஷ்ணு என மும்மூர்த்திகளின் சொரூபமாய் காட்சி கொடுத்து ஆலயத்திற்குள் நம்மை அழைக்கிறது,தேவநாதப் பெருமாளின் கருவறை விமானம்.இதனால்தான் திருமங்கையாழ்வார் தனது திவ்ய பிரபந்தத்தில் இத்தல பெருமாளை,‘மூவராகிய ஒருவன்’ என்று சிறப்பித்துப் போற்றுகிறார்."நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம' எனப்பெற்றேன்?"."வர இருக்கும் பிறவியிலும்வாழ்த்திடுவேன் நின் அருளை"."நாயேனை ஆட்கொண்டஅண்ணாமலையானைப் போற்றுவோம்🙏🏼🙏🏼 🔥ஓம் *நமசிவாய நம ஓம் 🔥*1216