Actor Kayal Devaraj
1K views 5 hours ago
#🧐நாட்டு நடப்பு #🗞அரசியல் தகவல்கள் #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #📽சினிமா தகவல்கள் ❤️❤️ #Mammootty #Karaikudi #AntoJoseph வழிப்போக்கனை கட்டியணைத்த மம்மூட்டி! விடியற்காலை மூன்று மணி. மெகா ஸ்டார் மம்மூட்டி, தனது மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் நிதீஷ் சகாதேவ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அவசரமாக காரைக்குடியில் இருந்து கேரளா திரும்புகிறார். அவரது மேலாளர் ஜார்ஜ், தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் மற்றும் நண்பரும், நடிகரும், MLAவுமான ரமேஷ் பிஷாரடி உடனிருந்தனர். அவர்கள் திருப்பதூர் வந்த போது நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. பிறகு கூகுள் மேப் மூலம் பயணத்தை தொடர்ந்தனர். ஆனால், பலமுறை தப்பான வழியைக் காட்டி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் அவர்களை அலையவிட்டது. கடுப்பான மம்மூட்டி, "நாம் திரும்பி காரைக்குடி ஓட்டலுக்கு போகலாம். நாளை காலையில் ரோடு திறக்கும்போது போகலாம்" என்றார். இதைக் கேட்டு உடனிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஏனென்றால், நாளைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்ய நேரிடும். எனினும், மம்மூட்டி சொன்னவுடனே டிரைவர் வண்டியை திருப்பினார். வழியில் யாரிடமாவது உதவி கேட்கலாம் என்றால், அந்த நேரத்தில் யாரையும் காணவில்லை. எந்த வண்டியும், ஆட்களும் அந்த வழியாக வரவே இல்லை. அவர்கள் பட்டமங்கலம் என்ற ஊரை அடைந்தனர். அங்கு பெட்ரோல் பங்க்கில் ஒரு இளைஞன் கொசு வலை போர்த்திக்கொண்டு இருந்தான். அவனை எழுப்பி, கேரளா செல்ல வேறு வழி இருக்கிறதா என்று கேட்னர். அவன் சொன்ன வழிகள் எல்லாமே ஏற்கனவே அவர்கள் போய் திரும்பி வந்த பாதைகள், ஏற்கனவே பயணித்த மூடப்பட்ட பாதைகள். அவன் மாற்று வழிகளை விளக்கிக் கொண்டிருந்த வேளையில், சிறிது தூரத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் அவர்களுக்கு அருகே வந்தார். வெளியே நின்று வழி கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் "நீங்க கேரளாவா?" என்று கேட்டபடி, காரின் உள்ளே யார் இருக்கிறார் என்று பார்த்தார். அவரது முகத்தில் ஆச்சரியம். அவரது தூக்க அசதி உடனே காணாமல் போய்விட்டது. "நீங்கள் மம்மூட்டி சாரா?" என்று அதிர்ச்சி அடைந்து கேட்டார். பிறகு எல்லா விவரங்களையும் கேட்டுவிட்டு, "நான் பைக்கில் முன்னால் செல்கிறேன். என்னை ஃபாலோ செய்தபடி வாருங்கள்" என்று சொல்லி, பைக்கை கார் முன்னே ஓட்டிக்கொண்டு சென்றார். சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சென்று, ஒரு இடத்தில் பைக்கை நிறுத்தி, "அதோ பாருங்கள். அப்படியே இதே ரோட்டிலேயே நேராக செல்லுங்கள். கேரளா வந்துவிடும்" என்று கூலாக சொல்ல, அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். "எவ்வளவு நல்ல மனிதர்... அவர் நாளைக்கு யாரிடமாவது 'மம்மூட்டியை பார்த்தேன்... வழி சொல்லி கொடுத்தேன்' என்று சொன்னால், அதை யாராவது நம்புவார்களா?" என்றார், ரமேஷ் பிஷாரடி. அதைக் கேட்டதும் மம்மூட்டி சட்டென்று காரிலிருந்து இறங்கினார். "உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டார். "பாண்டியன்" என்று அவர் சொல்ல, "உங்கள் போன் நம்பர் கொடுங்கள்" என்று, மம்மூட்டி அவரிடம் இருந்து நம்பரை வாங்கி ரமேஷ் பிஷாரடியிடம் கொடுத்தார். பிறகு மம்மூட்டி பாண்டியனை இறுக கட்டிப்பிடித்தார். "பாண்டியன், இனிமேல் நீங்கள் எனது நண்பர்" என்று சொல்லி, ரமேஷ் பிஷாரடியிடம், பாண்டியனின் போனிலேயே போட்டோ எடுக்கும்படி சொன்னார். பிறகு மம்மூட்டி அவருக்கு நன்றி சொல்லி விடைபெற்றார். மம்முட்டியின் எளிமையைப் பார்த்த பாண்டியனுக்கு அங்கு நடந்த சம்பவத்தைப் பற்றி இன்னும் நம்ப முடியவில்லை. இது கதையல்ல.. நிஜம்.
24 likes
9 shares

More like this