Murugan
516 views • 1 days ago
*அண்ணாசாலை பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 நபர்கள் கைது. பணம் ரூ.5,500/-, 3 செல்போன்கள்
மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல்*.
சென்னை பெருநகரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்,
வெளி மாநில, ஒரு நம்பர் மற்றும் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை
பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், காவல்
உதவி ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், தனிப்படை காவல் ஆய்வாளர்கள்
தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து
வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக D-2 அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு
கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (16.08.2026) நண்பகல் இராயப்பேட்டை, உட்ஸ் ரோடு பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் அருகே கண்காணித்து வந்தபோது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த மூன்று நபர்களை விசாரணை செய்ததில், அவர்கள் வெளி மாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை வாட்ஸ் அப் மூலம் பார்த்து 3 நம்பர்களை ரசீதில் எழுதி கொடுத்து சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
அதன்பேரில், மேற்படி மூன்று நபர்களையும் D-2 அண்ணாசாலை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, எதிரிகள் 1.ஆழ்வார், வ/60, சிவபிரகாசம் நகர், சென்னை, 2.ரவி, வ/46, பார்டர் தோட்டம், அண்ணாசாலை, சென்னை, 3.சுரேஷ்குமார், வ/46, சைதாப்பேட்டை, சென்னை ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.5,500/- , 3 செல்போன்கள் மற்றும் 4 துண்டு காகித சீட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (16.08.2026) நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு எதிரிகளை காவல்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்
#⚡ஷேர்சாட் அப்டேட் #🎥Trending வீடியோஸ்📺 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #📺உள்ளூர் தகவல்கள்📰 .
13 shares