தமிழ்சீயான்43
1K views • 24 days ago
🌿 இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
10.08.2026 (திங்கள்)
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
முதலாவது மகிழ்ச்சி நிறை மறையுண்மை
தேவமாதாவுக்கு கபிரியேல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
மூன்றாம் நூற்றாண்டில் மறைசாட்சியாக மரித்த ஏழு திருத்தொண்டர்களில் ஒருவரும், இன்றைய புனிதருமான புனித லாரன்ஸிடமிருந்து ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தல் என்ற உன்னத குணத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
இரண்டாவது மகிழ்ச்சி நிறை மறையுண்மை
தேவமாதா எலிசபெத்து அம்மாளைச் சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், "குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள்." என புனித பவுலடியார் கூறுகிறார்.
நாம் எந்த அளவில் விதைக்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
மூன்றாவது மகிழ்ச்சி நிறை மறையுண்மை
குழந்தை இயேசு பெத்லகேமில் பிறந்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
"தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்." என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நாம் பிறருக்காக வாழ்ந்து நமக்குரிய நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
நான்காவது மகிழ்ச்சி நிறை மறையுண்மை
குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்ததைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நமது பேச்சிலும் செயல்களிலும் தூய ஆவியானவர் நம்மை நன்கு வழிநடத்தி, தேவையான ஞானத்தைத் தந்தருள வேண்டி இந்த நான்காவது பத்து மணியை ஒப்புக்கொடுப்போம்.
ஐந்தாவது மகிழ்ச்சி நிறை மறையுண்மை
காணாமல் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டடைந்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு, பல ஆண்டுகளாக நமது வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் உத்தரிக்கிற ஸ்தலத்து அனைத்து ஆன்மாக்களும், நம் உயிர்த்த ஆண்டவரின் அருளால் விரைவில் மோட்ச பாக்கியத்தை அடைய வேண்டி இந்த ஐந்தாவது பத்து மணியை ஒப்புக்கொடுப்போம்.
ஆமென்.
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #வேளாங்கண்ணி மாதா #✝️வேளாங்கண்ணி சர்ச்⛪ #சகாய மாதா
16 shares