திரைபாரதி
618 views 5 days ago
அது நமது கட்டுப்பாட்டில் இல்லவே இல்லை... இடைவெளியில்லாமல் அலையலையாக எழும் நினைவுகளை ஒரு நேர் பாதையில் நிலை நிறுத்துவது என்பது ஒரு சவாலான வேலை. நமது நினைவுகளால் விழைகின்ற எண்ணங்களும் சிந்தனைகளும் நமது செயல்பாடுகளை தீர்மானிக்கின்றன.   நினைவுகள் தன்னிச்சையாக எழுகின்றன. அந்த வேலை நம்மைக் கேட்டோ அல்லது நமது விருப்பப்படியோ நடப்பதில்லை. இதயம் துடிப்பதையும் மூச்சு விடுவதையும் எவ்வளவு முயற்சி செய்தாலும் நம்மால் நிறுத்த முடிவதில்லை. அப்படியே, கடலலைகள் போல மாறி மாறி எழும் நினைவலைகளையும் அடக்க முடிவதில்லை. ஆனால், கொஞ்சம் பயிற்சி செய்தால் அவற்றை நல்ல எண்ணங்களாகவும் சீரிய சிந்தனைகளாகவும் மடைமாற்ற முடியும்.   பொதுவாக எல்லோர் மனதிலும் எழக்கூடிய ஒரு கேள்வி, அதனால் நமக்கு என்ன நன்மை என்பதே. பொதுவாக, ஆதாயம் கருதியே எதையும் செய்ய வேண்டும் என்று மனிதன் நினைக்கிறான். உதாரணமாக, இயற்கையை ரசிப்பது, சுற்றுச்சூழலை பேணுவது, பிறருக்கு நம்மால் முடிந்த உதவியை உளமாறச் செய்வது ஆகியவற்றால் நமக்கு என்ன நன்மை?    மனதைத் திசை திருப்புவது ஒரு வேலை என்று நினைப்பதால் பிரதிபலனை எதிர்பாராமல் நாம் அதைச் செய்வதில்லை! மனதை அதன் போக்கில் விட்டுவிடுகிறோம். அதனால் விளையும் எண்ணங்கள் நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் பாதிக்கக்கூடும் என்பதை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.   நமது மனம் தறிகெட்டு ஓடி எதையெதையோ நினைக்கிறது, அல்லது நடந்த ஒரே சம்பவத்தை மீண்டும் மீண்டும் நினைத்து அசைபோடுகிறது. அதனால் மனம் நிம்மதியின்றி அலைபாய்கிறது அல்லது இரத்தக் கொதிப்பு அதிகமாகிறது. நமது எண்ணங்கள் நம் வசப்படும்போது, நிதானம் கைகூடுகிறது வாழ்க்கை வசப்படுகிறது. நமது கவலைகள் பெரும்பாலும் நமது வாழ்க்கையில் நடப்பதற்கான வாய்ப்புகளே இல்லாத பிரச்சினைகள் பற்றியே!   அவசர வேலையாக ஊருக்குப் போக வேண்டும். மனமெங்கும் எதை எதைப்பற்றியோ எண்ணங்கள், தேவையற்ற சிந்தனைகள். நமது பயங்கள் யாவுமே தேவையற்ற சிந்தனைகளின் பிள்ளைகளே. கடைசியில் பஸ்ஸில் எறி அமர்ந்த பின், முன்பதிவுச் சீட்டை வீட்டிலேயே மறந்து போய் விட்டுவிட்டது நினைவுக்கு வருகிறது.   தீய எண்ணங்கள் போதை மருந்தைப் போன்றது. எளிதாகத் தொற்றிக் கொள்ளும். அவற்றை சுலபத்தில் உதறித் தள்ள முடியாது. தேவையற்ற சிந்தனைகளை களைகளாக மனதில் வளர்வதற்கு நாம் இடம் கொடுக்கும்போது, அங்கு நல்ல சிந்தனைகள் முளைப்பதற்கு இடம் இல்லாமல் போகிறது.    இறை வழிபாடும் இசையும் மனதை ஒருமுகப் படுத்த வல்லது எனினும், அதில் நம்மால் முழுமையாக ஒன்றிவிட முடிவதில்லை. மனம் அலைபாய்கிறது. ஒரு பாதையில் செல்லும்போது அனிச்சையாக கண்கள் காண்கின்றன, கால்கள் நடக்கின்றன, மனதில் என்னென்னவோ எண்ணங்கள். நேற்று நாம் சென்ற பாதையில் இருக்கும் ஒரு கடைக்குச் செல்ல இன்று நாலு பேரிடம் வழி கேட்கிறோம்.   நாளை, பாதையில் நடந்து செல்லும்போது, ஒரு ஈடுபாட்டோடு வருவோர் போவோர், வாகனங்கள், நடக்கிற நிகழ்வுகள், கேட்கிற குரல்கள், கடைகளில் தென்படுகிற பொருட்கள் ஆகியவற்றை கவனித்துக் கொண்டு செல்வதற்கு முயன்று பாருங்களேன்! குறைந்த பட்சம் இதுவரை முயன்று பார்க்காத இதை நீங்கள் செய்யும்போது, அதுவும் எளிதல்ல எனப் புரியும். அதாவது, நமது மனம் நமது கட்டுப்பாட்டில் சுத்தமாக இல்லை என்பதை உணர்வீர்கள்! Video courtesy: Hatice Baran - Pexels #நினைவுகள் #எண்ணங்கள் #சிந்தனை #மனஅமைதி #மனநலம் #மனக்கட்டுப்பாடு   Denver Perfume for Men #Ad https://link.amazon/B08WBmeTV #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
13 shares

More like this