#பொய்
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பொய்யும் உங்களை ஒரு நாள் தலை குனிய வைக்கும்.
அன்று புரியும், நீங்கள் ஏமாற்றியது அவர்களை அல்ல உங்களை என்று.
நீங்கள் சொல்லும் ஒரு பொய்யை நம்புவதற்கு, ஒரு நிமிடம் கூட யோசிக்காதவர்கள், நீங்கள் சொல்லும் உண்மையை நம்புவதற்கு ஆயிரம் முறை யோசிப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களை நம்பும் மனிதர்களிடம் பொய் பேசாதீர்கள்.. உங்களிடம் பொய் பேசும் மனிதர்களை நீங்களும் நம்பி ஏமாறாதீர்கள்.
இறைவன் படைப்பில் உங்களுக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு. அதை தொலைத்து விடாதீர்கள்.
உண்மை பேசி வீழ்ந்தவர்களும் இல்லை. பொய் பேசி வாழ்ந்தவர்களும் இல்லை.


