ShareChat
click to see wallet page
search
#பெருங்காயம் பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்* சமையல் செய்யும்போது வாசனைக்காக பயன்படுத்தும் பெருங்காயத்தில் ஏராளமான மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன. பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம். நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும். பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும், அதோடு வாய் துர்நாற்றமும் போய்விடும். ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் உடனே தீரும். பெருங்காயம் வாயுக்கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும் ஹிஸ்டீரியா மற்றும் இருமலுக்கும் மிகவும் பயன்படுகிறது. இலைகள் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றவும், வியர்வை மற்றும் ஜீரண தூண்டுவியாக பயன்படுகிறது. பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள், நுரையீரல் - சுவாசமண்டலம் வழியாக மார்புசளியினை இருமல் மூலம் வெளியேற்றுகிறது. மார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் ஆகியவற்றினை போக்க உதவுகிறது, மேலும் உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியினை குறைக்கிறது.
பெருங்காயம் - பெருங்காயம் பெருங்காயம் பிசின் வகைபை சேர்ந்தது ` வயிற்றில் ஏற்படும் உப்புச்சத்தை சரிசெய்யும் ` வயபிறு  வலி மார்பு வலி சமங்களில் றிவாரணம் 60119 | தரும்  உ வாத பிரச்னைகளைப் போக்கும் மாதவிடாய் வலிபைக் குறைக்கும்  மோரில் பெருங்காயத்தூள் கலந்து குடிக்கலாம் ` பெருங்காயம் பெருங்காயம் பிசின் வகைபை சேர்ந்தது ` வயிற்றில் ஏற்படும் உப்புச்சத்தை சரிசெய்யும் ` வயபிறு  வலி மார்பு வலி சமங்களில் றிவாரணம் 60119 | தரும்  உ வாத பிரச்னைகளைப் போக்கும் மாதவிடாய் வலிபைக் குறைக்கும்  மோரில் பெருங்காயத்தூள் கலந்து குடிக்கலாம் ` - ShareChat