#தவாஃப்
ஹஜ் செய்யும் முறை
ஹஜ் - தவாப்
நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்து,
முதலாவது தவாஃபில் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவார்கள்.
ஏழு சுற்றுக்களில்
முதல் மூன்று சுற்றில் (தோள்களைக் குலுக்கி) வேகமாக ஓடுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1603
#ஹஜ் செய்யும் முறை
ஹஜ் செய்யும் முறை
ஹஜ் - தவாஃப்
தவாஃப் செய்யும் போது கூற வேண்டியவை
ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே
*رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنْيَا حَسَنَةًۭ وَفِى ٱلْـَٔاخِرَةِ حَسَنَةًۭ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ⭘*
""ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்''*
பொருள் :
“எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையை(த் தருவாயாக!) மறுமையிலும் நன்மையைத் தருவாயாக! நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!”
என்று சொல்ல வேண்டும்.*
நூல் : அஹ்மத் 14851
#ஹஜ்
ஹஜ் செய்யும் முறை
மகாமே இப்ராஹீம்
தவாஃப் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம்
தவாஃப் செய்து முடித்தவுடன் "மகாமே இப்ராஹீம்' என்ற இடத்தில் இரண்டு ரத்அத்கள் தொழுவது அவசியம்.
மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்''. குர்ஆன் 2:125
அத் தொழுகையில்
முதல் ரக் அத்தில் "குல்யாஅய்யுஹல் காபிரூன்' சூராவையும்,*
இரண்டாவது ரக் அத்தில் "குல்ஹுவல்லாஹு அஹத்' சூராவையும் ஓத வேண்டும்.
நூல் : முஸ்லீம் 2137
#ஹஜ்
ஹஜ் செய்யும் முறை ⏺
ஹஜ் - தவாப்
நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்து,
முதலாவது தவாஃபில் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவார்கள்.
ஏழு சுற்றுக்களில்
முதல் மூன்று சுற்றில் (தோள்களைக் குலுக்கி) வேகமாக ஓடுவார்கள்.*
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1603
#நம் பிரச்னைகள்
உங்கள் முன் ஒரு பிரச்சனை வந்துள்ளது.
முதலில் அது எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.
ஓடி ஒளிய வேண்டாம்! நெஞ்சை நிமிர்த்தி வீரமாக அதனை அணுகுங்கள்!
'அச்சமில்லை, அச்சமில்லை.. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்' என்ற மகாகவியின் பாடலை நினைவுபடித்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் சிறிது கூட எதிர்பார்க்காத பிரச்சனை ஆனாலும், 'சரி நடந்தது நடந்து விட்டது. நடந்ததை மாற்ற முடியாது. அதனை நினைத்து அப்படி செய்திருக்கலாம், இப்படி நடந்திருக்கலாம் எனக் குழம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை. இப்போது நாம் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்று தான். என்னவென்றால் இந்த பிரச்சனையில் இந்த சமயத்திலும் நமக்கு சில சாதகமான விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அவற்றை கண்டுபிடித்து அவற்றை உபயோகித்து இந்த பிரச்சனையை இருந்த இடம் தெரியாமல் வெற்றி கொள்ள முடியும்' என்ற உறுதி ஏற்க வேண்டும்.
பிரச்சனையில் ஜெயிப்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் துணிவுடன் எதிர் கொண்டு ஜெயிப்பதில் தான் மனிதனின் வீரம் உள்ளது. 😊😊😊
#அனுபவம் சிறப்பு
அனுபவமே சிறந்த ஆசான்.
ஆயிரம் அறிவுரைகள் தராத பக்குவத்தை
ஆயிரம் புத்தகங்கள் தராத படிப்பினை
ஒரு அனுபவம் தரும்.
ஆம் அனுபவமே சிறந்த ஆசான்.
சில மோசமான அனுபவங்கள் தான்
பல பக்குவப்பட்ட மனிதர்களை உருவாக்குகிறது.
சில தவறான முடிவுகள் தான்
பின்னர் ஒரு நல்ல முடிவை மேற்கொள்ள
அடித்தளமாக இருக்கிறது.
வீழ்ந்தவருக்குத் தான் எழத்தெரியும்
தோல்வி அடைந்தவருக்குத் தான் தெரியும்
வெற்றி எவ்வாறு கைவிட்டுப் போனது என்பது தெரியும்.
முயற்சி செய்தவருக்குத் தான் தெரியும்
வெற்றியை எவ்வாறு அடைய வேண்டும் என்பது
அனுபவப்படுங்கள் பக்குவப்படுங்கள்
அனுபவப்படுங்கள் தெளிவு பெறுங்கள்
அனுபவப்படுங்கள் நிதானத்தைப் பெறுங்கள்*
அனுபவப்படுங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள்
அனுபவப்படுங்கள் பெற்ற அனுபவங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்
அனுபவப்படுங்கள் உலகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்
அனுபவப்படுங்கள் உறவுகளையும் , உடன் இருப்பவர்களையும் ,
உங்களுக்கு வேண்டியவர்கள் என நீங்கள் நினைப்பவர்களையும்
புரிந்து கொள்ளுங்கள்
பெற்ற அனுபவங்களை எல்லாம் பயன்படுத்தி வெற்றியைப் பெறுங்கள். 😊😊😊
#அமைதியான சாலை
யாரும் இல்லாத சாலை,
ஏகாந்தமான இரவு,
சன்னல் தட்டும் மழை,
நிமிடங்களை மெதுவாக்குகிறது.
ஆயிரம் சிந்தனைகள்,
துளிகளாய் கரைந்து,
மனம் அமைதியில்,
நிம்மதி கொள்கிறது!
இந்த பயணம்
இரைச்சலற்ற இரவின்
அமைதியில் மனதிற்கு
நிம்மதியைத் தருகிறது.
இந்த இயற்கை நிலவு மற்றும்
நட்சத்திரங்கள்
இரவின் அழகை ரசிக்க
வைக்கின்றன.
இந்தத் தனிமை சிந்திக்கவும்,ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும்
நேரத்தை வழங்குகிறது.
இந்தப் பயணம் கடந்து போன காலங்களின் மலரும் நினைவுகளாய் பயணங்கள் முடிவதில்லை ....!!
#அல்லாஹ் என் இறைவனே!
எனக்கு எதுபற்றி அறிவு இல்லையோ அதை உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து, எனக்கு அருள் புரியாவிட்டால் நான் நஷ்டமடைந்தோரில் ஆகி விடுவேன்”*
அல் குர்ஆன் 1️⃣1️⃣ : 4️⃣7️⃣*
#பிரச்னைகள்
ஒவ்வொரு பிரச்சனைக்கும் மூன்று வகையில் தீர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன...
ஏற்றுக் கொள்ளுங்கள்!
மாற்றுங்கள்!
விட்டு விடுங்கள்.
Every problem has the possibility of Three types of solutions...
Accept it!
Change it!
Let it go.
சிந்திப்போம் செயல்படுத்துவோம்!












