#மனிதனின் மூன்று காலங்கள்
மனிதன் வாழ்க்கையில் காலங்கள் மூன்று வகை.
1) சிரித்து பேசி விளையாடுவது ஆரம்ப காலம்.
2) பேச நேரமில்லாமல் ஓடிக்கொண்டு இருப்பது இடைப்பட்ட காலம்.
3) பேச யாருமில்லாமல் தவிர்ப்பது கடைசி காலம்.
வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது ஒரு கலை ஆனால் அதை யாரிடமும் கற்றுக் கொள்ள முடியாது.
உங்களுக்கு கிடைத்த வாழ்க்கையை எண்ணி மகிழ்ச்சிக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்களுக்கு சாதாரணமாக தோன்றும் வாழ்க்கையானது பலருக்கு கனவாக இருக்கிறது.
பேசும் முன் கேட்டுவிட்டு பேசுங்கள், எழுதும் முன் யோசித்து எழுதுங்கள் உங்கள் பதில் சரியாக இருக்கும்.
செலவழிக்கும் முன் அது நீங்கள் சம்பாதித்த பணமா என்று பார்த்து செலவழியுங்கள் பணத்தின் அருமை தெரியும்.
பணத்தையும் பாசத்தையும் கொடுங்கள் ஆனால் திரும்ப கிடைக்கும் என்று எதிர் பார்க்காதீர்கள்.
யார் உங்களை அவமதித்துப் பேசினாலும் நீங்கள் ஆவேசமடைந்து, அவர்களிடம் மறுத்துப்பேசி உங்களை நிரூபிக்க நினைக்காதீர்கள்.
செய்யும் செயலை முழு மனதோடு செய்யுங்கள். வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நிச்சயம் நிம்மதி கிடைக்கும்.
நீங்கள் செல்லும் வழி சரியென்றால், உங்கள் எண்ணம் போலவே வாழ்க்கை நிச்சயம் அமையும் கவலையை விடுங்கள்.


