#தனிப்பட்ட வாழ்க்கையில்
தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருவர்
சிக்கனமா?
செலவழியா?
கோபமா?
சாந்தமா?
சைவமா?
அசைவமா?
என்பது பிரச்சனை இல்லை.
சம்மதத்துடன் ஆண், பெண் சகவாசம் கூட இருந்து தொலைக்கட்டும். அதனால் பொதுமக்களுக்கு கேடு இல்லை கேடு இல்லை.
ஆனால்,
மது நுண்ணறிவை கெடுக்கும். அது கூடாது. தன்னைவிட ஒருவர் கீழ் அல்லது மேல் என்று பிறப்பு அடிப்படையில் கற்பிக்கக் கூடாது.
ஒரு இனம் இன்னொரு இனத்தை ஏமாற்றி ஆதிக்கம் செய்வதற்கு,கருத்தால், செயலால் துணை போகக்கூடாது.
தொண்டு செய்ய வந்த இடத்தில் பொதுப்பணத்தை திருடக்கூடாது.தொழில், வாரிசு முறை செய்யக்கூடாது.
இவைதான் நல் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.


