துங்கபத்ரா நதியின் கரைதனில் தோன்றும் துணைவனை நாடுவோம்!
இங்கே இன்றே என் முன்னே வர இசைந்த குருவினைப் பாடுவோம்!!
காலம் காலமாய் உலகைக் காக்கும் கருணை தனையே நாடுவோம்!
கற்றதும் மனம் களிப்பதும் தரும் கன்னித் தமிழில் பாடுவோம்!!
ஞாலம் போற்றிடும் ஞானம் தந்திடும் நாதன் அருள் தனை நாடுவோம்!
நல்லதும் செய வல்லதீதென நாமும் அறிந்ததைப் பாடுவோம்!!
மனிதராய் இங்கு பிறர்க்கு நலம் தரும் மனம தும் வேண்டி நாடுவோம்!
புனிதம் நாமம் புவனம் காக்கும்; போற்றிப் புகழ்ந்து பாடுவோம்!!
இல்லம் காக்க ஏற்றதீதென எனக்கும் உரைத்திட்ட நாயகன்!
சொல்லும் செயலும் வேற்றுமையின்றி சுகம் தரும் வழியுரைப்பவன்!!
மன இருள்தனை நீக்கி அருளும் மகிமை தனையே நாடுவோம்!
அருளும் தருவான்; பொருளும் தருவான் அவன் புகழ்தனைப் பாடுவோம்!!
குருவே சரணம்...
ஶ்ரீராகவேந்திரர் திருவடிகளே சரணம்....
11.09.2025.. நேசமுடன் விஜயராகவன்.... #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🔍ஜோதிட உலகம் 🌍 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻


