ShareChat
click to see wallet page
search
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தும் திமுக அரசுக்கு கண்டனம்! கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு, சமீபத்தில் குப்பை வண்டியில் உணவு கொண்டு சென்று விநியோகம் செய்யப்பட்டது என்ற செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. தொடர்ச்சியாக, தூய்மைப் பணியாளர்களை இரண்டாந்தர குடிமக்களாக நினைத்துக்கொண்டு ஆளும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்கள். ஏற்கனவே, சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களின் 100 நாள் கடந்த உரிமைப் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத திமுக அரசு, 'தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்' என்ற பெயரில் அவர்களது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வருகிறது. இத்திட்டத்தால் சென்னையில் 60% தூய்மைப் பணியாளர்கள் கூட பயன்பெறவில்லை. உணவுக்காக அவர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழலே அதிகமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஊதிய நிலுவை, முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது போன்றவற்றை எதிர்த்து தங்களது உரிமைகளுக்காகத் தூய்மைப் பணியாளர்கள் குரலெழுப்பி வருகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ளமுடியாத அரசு, கோவையில் குப்பை வண்டியில் உணவு கொண்டு சென்று தூய்மைப் பணியாளர்களை இழிவுபடுத்துகிறதோ என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை. சுயமரியாதை, சமூகநீதி என வாய்கிழியப் பேசும் @mkstalin தலைமையிலான திமுக அரசு, எளிய மக்களிடம் அதிகார வெறியுடன், மனித மாண்பின்றி நடந்துகொள்கிறது. தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஆட்சிக்கு வந்தபின் ஏமாற்றுவது திமுக அரசுக்கு ஒன்றும் புதிதல்ல. தூய்மைப் பணியாளர்களுக்குரிய உரிமைகளை ஏற்று, அவர்களை உரிய மரியாதையுடன் நடத்தத் தவறிய திரு. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் #விளம்பரமாடல்_அரசு_திமுக ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##dmkfails ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##StandWithSanitaryWorkers
விளம்பரமாடல்_அரசு_திமுக - ShareChat