பொதுவாக இட்லி தயாரிக்கும் போது இட்லியானது தட்டில் ஒட்டிக் கொள்ளும். அதை அகற்றுவது சற்று சிரமமாக இருக்கும். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றி வந்தால் இட்லி தட்டில் இட்லியை ஒட்டாமல் எடுக்கலாம். அது என்ன என்று இப்போது பார்க்கலாம்.
இதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்து அதை இட்லி தட்டில் தடவ வேண்டும். பிறகு மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். இட்லி எடுப்பதற்கு நீங்கள் பயன்படுத்தும் ஸ்பூனில் எண்ணெய் தடவ மறக்காதீர்கள்.
இட்லி புசுபுசுன்னு வர சிறிதளவு கொள்ளுவை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து அதை இட்லி மாவில் சேர்த்து சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு எப்போதும் போல ஆவியில் வேகவைத்து அவிக்கவும். இப்படி செய்தால் இட்லி புசுபுசுனு வரும்.
இட்லிக்கு அரிசி மற்றும் உளுந்து ஊற வைக்கும்போது அதனுடன் ஒரு ஸ்பூன் கோதுமையை சேர்த்து ஊற வைத்து அரைத்தால் இட்லி நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு மென்மையாக இருக்கும்.
இட்லி மாவு புளித்து விட்டால் அதை தூரக்கொட்டாமல் ஒரு கிளாஸ் தண்ணீரை அதில் ஊற்றி சில நிமிடம் அப்படியே வைத்து விட்டுங்கள். இட்லி மாவு மேல் தண்ணீர் தேங்கி நிற்கும் அந்தத் தண்ணீரை வடிகட்டிவிட்டால் மாவு புளிக்காது. #🥘உள்ளூர் சமையல் ரெசிபி #🍱இரவு டின்னர் ரெசிபி #ஹெல்த்தி உணவுகள்👨🏽🍳 #சமையல் குறிப்பு


