ShareChat
click to see wallet page
search
குடை பிடித்து செருப்புமிட்டு புத்தகமும் கொண்டு குடுகுடென நடந்து வரும் குழந்தைகளே கேளீர்! மழைக்காலம் வழி வழுக்கும் மிகக் கவனம் மக்காள் வழியருகே வெள்ளமுண்டு விலகிவரல் வேண்டும் வெள்ளத்தில் கல்லெறிந்து விளையாடல் வேண்டாம்! வீண் சண்டையால் வழுக்கி விழுந்தெழும்ப வேண்டாம். கண்மணிகாள் நீர்சிரங்கு காலில் வரும் கவனம் கண்ணுறக்கம் இல்லாமல் கதறியழ வேண்டும் அம்மா அப்பா சொற்கேட்டு நல்லாசிரியற்கடங்கி ஒழுக்கமுடன் பள்ளியிலே படித்துவரல் வேண்டும்! #👶குழந்தைகள் உலகம் #😇அழகிய குழந்தைகள் #💪ஊக்குவிக்கும் கதைகள் #🌧️மழைக்கால மீம்ஸ்😆
👶குழந்தைகள் உலகம் - ShareChat