#வேலூர்
#அரசு_மருத்துவமனை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை சடலம் கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.... 📌
பிறந்த குழந்தை இறந்ததால் கால்வாயில் வீசப்பட்டதா? உயிரோடு கால்வாயில்
வீசப்பட்டதா என்பது உடல் கூராய்வில் தெரிய வரும்
என்று கூறப்படுகிறது... 📌
இந்த சம்பவத்தில்
ஈடுபட்டவர் யார் என காவல்துறையினர்
விசாரணை
நடத்தி வருகின்றனர்... 📌
வேலூர் அரசு பென்ட்லேண்ட்
உயர் சிகிச்சை மருத்துவமனை அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் பிறந்த பெண் குழந்தை சடலமாக இருப்பதாக அந்த பகுதியில்
இருந்த பொதுமக்கள் வேலூர் தெற்கு காவல்
நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.... 📌
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கழிவுநீர் கால்வாயில் இருந்த பெண் பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு உடல் கூராய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.... 📌
மேலும் கழிவு நீர் கால்வாயில் பெண் பச்சிளம் குழந்தையை
வீசிச் சென்றது யார் என்று காவல்துறையினர்
வழக்குப் பதிவு செய்து
விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.... 📌
#வேலூர் #அரசு மருத்துவமனை #tamilnadu
00:45

