#anubathathuvam. தத்துவம்
நம்மால் நம்மில் மாற்ற இயலாத பழக்கங்கள் போலவே மற்றவர்களிடத்திலும் பழக்கங்கள் நிறைந்திருக்கும் என உணரும் நிலை பேரமைதியை உண்டாக்கும்.
பிறரின் பழக்கவழக்கங்களை மாற்றுவதில் பெரும் தோல்வியே உண்டாகும். அவரவர்களுக்குப் பிடித்தது எதுவோ அதுவே செய்து கொள்வார்கள்.
அவரவர் உணர்தலே தீர்வு.
அதுல பாருங்க..
பணம் சம்பாதிக்கலாம் தப்பில்லை..!
அது, நமக்கு உடம்பு சரியில்லாமப் போயிட்டா...
ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு
போறதுக்கு பதிலா..
வக்கீலப் பார்க்கப்
போற அளவுக்கு
இருக்கக் கூடாது. .;!
இந்தக் குளிர்ல காலைல வாக்கிங் போயிட்டு. .
பச்சத்தண்ணிய தலையில ஊத்தி குளிக்கிறன்தான்...
**இளந்தாரிப்பயல்..
குறள்:587
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்
ஒரு வட்டத்தை நேர்த்தியாக அளக்க முயன்றதின் விளைவுகள் தான் மாபெரும் கணிதங்களின் ஆரம்பம்
ஒரு தேர்த்தியான இறுதி
இல்லாமல் வட்டத்தின்
தனிச்சிறப்பு
தனிச்சிறப்பே சாபம் !


