ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sarvam Sivarpanam 🙏🔱⚜️ முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லி மழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ? அ௫ளியவர் : திருஞானசம்பந்தர். திருமுறை : முதல்-திருமுறை. பண் : தக்கராகம். நாடு : சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம். தலம் : திருப்பாச்சிலாச்சிராமம். சுவாமி : மாற்றறிவரதர், சமீவனேசுவரர், பிரமபுரீசுவரர். அம்பாள் : பாலாம்பிகை, பாலசௌந்தரி. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - V0M/్ நமசிவாய ஓம் வளர் திங்கள்துளங்கி விளங்க துணி சுடர்ச்சடை சுற்றி முடித்து பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ ஆர் இடமும் பலி தேர்வர்; அணி வளர் கோலம் எலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற மணி வளர் கண்டரோ மங்கையை வாட செய்வதோ இவர் மாண்பே? மயல் V0M/్ நமசிவாய ஓம் வளர் திங்கள்துளங்கி விளங்க துணி சுடர்ச்சடை சுற்றி முடித்து பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ ஆர் இடமும் பலி தேர்வர்; அணி வளர் கோலம் எலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற மணி வளர் கண்டரோ மங்கையை வாட செய்வதோ இவர் மாண்பே? மயல் - ShareChat