ShareChat
click to see wallet page
search
#உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம் அக்டோபர்-22 இன்று 22 அக்டோபர் உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம் உலகில் சுமார் 70மில்லியன் மக்கள் இந்தக் குறைபாட்டுடன் உள்ளனர் இந்தியாவில் மட்டும் 12 மில்லியனுக்கும் மேல் மக்கள் திக்குவதாக இந்திய திக்குவாய் சங்கம் ஒரு புள்ளிவிவரத்தில் குறிப்பிட்டுள்ளது இந்த திக்குவாய் பிரச்சினை என்பது, ஒருவித பேச்சு குறைபாடு வார்த்தைகளின் முதலில் சிரமப்பட்டு ஆரம்பிப்பது, சொற்றொடரின் நடுவே விட்டு விட்டு பேசுவது, தேவையில்லாமல் சில சொற்களைத் திரும்ப திரும்ப சொல்வது, ஒரே சொல்லை சொற்றொடருக்கு நடுவே பலமுறை வேகமாக சொல்வது, பேசும்போது அர்த்தமற்ற அசைகள் (ஒலிகள்) எழுப்புவது (ஆ... ம்ம்... ஹ..), இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் சிறுவயதில், திக்கிப் பேசும் குழந்தைகளுக்கு அவர்கள் குடும்பத்தினர், குறிப்பாக பெற்றோர் உறுதுணையாக இருப்பது அவசியம் மற்றவர் கேலி செய்தாலோ,எள்ளி நகையாடினாலோ பாதிக்கப்படும் குழந்தையின் மனது பெற்றோர்களால் கண்டிக்கப்படும் போது மேலும் பாதிக்கப்படும் மற்றவர் போல் வேகமாகப் பேசவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த திக்கல் அதிகமாகிறது இந்த குறைபாட்டை குணப்படுத்த மருந்துகள் ஏதுமில்லை முறையான பயிற்சிகள் மூலம் மட்டுமே சரி செய்ய முடியும்
உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம் அக்டோபர்-22 - ೭_6ಹ திக்குவாய் விழிப்புணர்வு நாள் International Stuttering Awareness Day October 22 ೭_6ಹ திக்குவாய் விழிப்புணர்வு நாள் International Stuttering Awareness Day October 22 - ShareChat