ShareChat
click to see wallet page
search
சென்னை.. பல்லாவரம்.. இதன் அருகே அமைந்துள்ள ஒரு திவ்யதேசம் இது.. தோயாத்ரி க்ஷேத்ரம்.. கண்டாரண்ய க்ஷேத்ரம்.. மூலவர் - நீர்வண்ணன்.. நீலமுகில் வண்ணன்.. கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலம்.. தாயார் அணிமாமலர் மங்கைத் தாயார்.. இங்கே நான்கு நிலைகளில் எம்பெருமானை தரிசிக்கலாம்.. நீர்வண்ணன் நின்ற திருக்கோலம்.. சாந்த நரசிம்மன்.. அமர்ந்த திருக்கோலம்.. திரிவிக்கிரமன்.. நடந்த திருக்கோலம்.. இவர்கள் மூவரும் கிழக்கு நோக்கியபடி.. மலைக்கோயிலில் ரங்கநாதன்.. தெற்கு நோக்கிய கிடந்த திருக்கோலம்.. மாணிக்க சயனம்.. ரங்கநாயகி தாயார் கிழக்கு நோக்கிய திருக்கோலம்.. தீர்த்தங்கள் மணிகர்ணிகா தடாகம்.. க்ஷீர புஷ்கரணி.. காருண்ய புஷ்கரணி.. சித்த புஷ்கரணி.. சுவர்ண புஷ்கரணி.. விமானம் - நீராத்ரி விமானம் தலவிருட்சம் - வெப்பாலை பூதத்தாழ்வார் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம்.. காண்டவ வனம் என்று அழைக்கப்பட்ட இங்கே.. முனிவர்கள் பலர்.. தொடர்ந்து திருமாலை நோக்கிக் கடுந்தவம் செய்தார்களாம்.. அந்தத் தவத்திற்கு கட்டுப்பட்ட பெருமானும்.. இந்த க்ஷேத்திரத்தை.. நீர்மலையாக உருவாக்கினாராம்.. வால்மீகி.. இங்கே மலைமேல் இருக்கும் பெருமானை வணங்கி.. கீழிறங்கி வர.. எம்பெருமான்.. தன் பரிவாரங்களுடன் ஸ்ரீராமனாகக் காட்சி தந்தாராம்.. கீழ்க்கோயிலில்.. இராமருக்கு தனி சன்னதி உண்டு.. திருமங்கை ஆழ்வார்.. இந்தப் பெருமானை மங்களாசாசனம் செய்ய இங்கே வர.. மலையைச் சுற்றி நீர் சூழ்ந்திருந்ததாம்.. ஆறு மாத காலம் தங்கி.. நீர் வடிந்தவுடன்.. இந்தப் பெருமானை ஸேவித்தாராம்.. இந்த க்ஷேத்திரம் திருநீர்மலை ஆனது.. ஆழ்வார் தங்கியிருந்த இடம் திருமங்கையாழ்வார்புரம் ஆனது.. அணிநீர்மலை.. உலகத்திற்கே ஆபரணமாய் விளங்கும் திருநீர்மலை.. எம்பெருமான் விரும்பி உறைகின்ற இடம் திருநீர்மலை.. எப்படித் தெரியுமா? நின்ற திருக்கோலம் திருநறையூரில்.. இருந்த திருக்கோலம் திருவாலியிலே.. கிடந்த திருக்கோலம் திருக்குடந்தையிலே.. நடந்த திருக்கோலம் திருக்கோவலூரில்.. எம்பெருமானின்.. இந்த நான்கு நிலைகளையும்.. நாம் திருநீர்மலையில் ஸேவிக்கலாம்..✍🏼🌹 #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 - ShareChat